திருமணத்தை மீறிய உறவால் பிரபல நடிகரை விவாகரத்து செய்கிறாரா மனைவி?

திருமணத்தை மீறிய உறவால் பிரபல நடிகரை விவாகரத்து செய்கிறாரா மனைவி?

பாலிவுட்டில் முன்னணி  நடிகராக வலம்  வருபவர் நடிகர்  நவாசுதீன் சித்திக். இவர் சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சிங்காரம் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரளவைத்தார். பாலிவுட்டில் மிகச் சிறந்த நடிகராக புகழப்படும்  இவர்  கேங்ஸ் ஆஃப் வசேப்பூர், லன்ச் பாக்ஸ், மண்ட்டோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

ttn

உத்தரப்பிரதேசம் புதானா என்ற கிராமத்தில்  சாதாரண குடும்பத்தில் பிறந்த இவருக்கு உடன் பிறந்தவர்கள் மொத்தம் 9 பேர். ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

திருமணத்தை மீறிய உறவால் பிரபல நடிகரை விவாகரத்து செய்கிறாரா மனைவி?

சமீபத்தில் நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஆலியா சித்திக்  அவருக்கு  விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய செய்தி பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து காரணம் இன்னும் முறையாக சொல்லப்படாத நிலையில் நவாசுதீன் சித்திக்கிடமிருந்து எந்த பதிலும் வராவிட்டால் 15 நாட்களுக்கு பிறகு சட்டரீதியாக அணுக  ஆலியா சித்திக் முடிவெடுத்துள்ளதாகவும் சொல்லப்பட்டது. 

திருமணத்தை மீறிய உறவால் பிரபல நடிகரை விவாகரத்து செய்கிறாரா மனைவி?

இந்நிலையில் நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஆலியாக்கும் பியூஷ் பாண்டே என்ற ஊடகவியலாளருக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை மறுத்த  பியூஷ் பாண்டே , ‘இது ஆதாரமற்ற செய்தி. முற்றிலும் பொய்யானது. நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன். இதுபோன்ற அருவருக்கத்தக்க செய்திகள் என குடும்பத்தை சங்கடப்படுத்துகிறது. அதிர்ஷ்டவசமாக என காதலி ஆலியாவுக்கு தெரிந்தவராக இருப்பதால் உண்மையை புரிந்து கொண்டார். இதை சட்டரீதியாக அணுகுவேன்’ என்று கூறியுள்ளார். 

மேலும் இதுகுறித்து ஆலியா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘எனக்கு யாருடனும் உறவு இல்லை. யாரையோ காப்பாற்ற என்னை அசிங்கப்படுத்துகிறார்கள். பணத்தால் உண்மையை ஒருபோதும் விலைக்கு வாங்க முடியாது’ என்று பதிவிட்டுள்ளார் . 

Share this story