அக்ஷய் குமாரின் மகனின் சேட்டை… வேடிக்கைப் பதிவிட்ட ட்விங்கிள் கண்ணா!

அக்ஷய் குமாரின் மகனின் சேட்டை… வேடிக்கைப் பதிவிட்ட ட்விங்கிள் கண்ணா!

எழுத்தாளரும் முன்னாள் நடிகையுமான ட்விங்கிள் கன்னா எப்போதும் வேடிக்கையான புகைப்படங்கள் மற்றும் நகைச்சுவையான பதிவுகளை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். வேடிக்கையான விஷயங்களைப் பார்த்து ரசிப்பது மற்றும் அவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது என்று எப்போதும் கலகலப்பாக இருந்து வருகிறார் ட்விங்கிள் கன்னா.

[video:https://www.instagram.com/p/B__k5vHDNh-/?utm_source=ig_web_copy_link]

தற்போது லாக்டவுனால் வீட்டில் முடங்கியுள்ள நடிகை தனது குடும்பத்துடன் கடித்த கழித்த வேடிக்கையான தருணங்களை பதிவிட்டு வருகிறார். அவர் தற்போது வெளியிட்டுள்ள பதிவில் அவர் புத்தகம் படித்துக்கொண்டே தூங்கிக் கொண்டிருப்பதைக் காண முடியும். இந்த படத்தை அவரது மகன் ஆரவ் எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

எனது மகன் எழுந்து இந்த படத்தை எடுத்துள்ளார். என் மகனும் நானும் ஒன்றாக சேர்ந்து படிக்கவும் எழுதவும் திட்டமிட்டிருந்தோம். ஆனால் நான் கையில் பென்சில் உடன் அசந்து தூங்கி விட்டேன். ஒவ்வொரு நாள் நான்கு மணி ஆகிவிட்டாலே போதும்… இந்த தூக்கம்  என்னை அணைத்துகக் கொள்கிறது.” என்று அவர்  வேடிக்கையாக பதிவிட்டுள்ளார் . அவரது மகள் மிகவும் அங்கு புத்தகம் படிப்பதை நம்மால் காணமுடிகிறது.

[video:https://www.instagram.com/p/CB24Oy5j949/?utm_source=ig_web_copy_link]

கடந்த வாரம் ட்விங்கிள் கண்ணா தனது கணவர் அக்ஷய் குமாருடன் வெளியிட்டிருந்த புகைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இருவரும் தங்கள்  விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கும் தருணங்களை வெளியிட்டிருந்தனர். 

[video:https://www.instagram.com/p/CBnoOW3DokL/?utm_source=ig_web_copy_link]

 

Share this story