அந்த திரைப்படத்திற்கு நான் இசையமைக்கவில்லை: யுவன் ஷங்கர் ராஜா

அந்த திரைப்படத்திற்கு நான் இசையமைக்கவில்லை: யுவன் ஷங்கர் ராஜா

நயன்தாரா நடித்துவரும்கொலையுதிர் காலம் திரைப்படத்திற்கு நான் இசையமைக்க வில்லை என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.

சென்னை: நயன்தாரா நடித்துவரும்கொலையுதிர் காலம் திரைப்படத்திற்கு நான் இசையமைக்க வில்லை என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.

உன்னைப்போல் ஒருவன், பில்லா 2 போன்ற படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்த திரைப்படம் கொலையுதிர் காலம். இப்படத்தை ஆரம்பத்தில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டெயின் மென்ட்ஸுடன் இணைந்து தயாரிப்பதாக இருந்தது.

பின்னர் பல காரணங்களால் படத்தை முடிக்காமலேயே யுவன் தயாரிப்பு நிறுவனம் கை விட்டது. முழுக்க முழுக்க இங்கிலாந்திலேயே நடத்தி முடிக்கப்பட்டுள்ள படப்பிடிப்பில், இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே ஷூட்டிங் மிச்சம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. அதன்பின்னர் தெலுங்கில் மற்றும்  இப்படத்தை தமன்னா-பிரபுதேவா வைத்துத் தொடர இருப்பதாகவும் சொல்லப்பட்டது. பின்பு இப்படம் வெளிவருமா என்று சந்தேகம் வந்த நிலையில்,எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தமிழ் உரிமையைப் பெற்றார். 

 

இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் இயக்குநர்,நயன்தாரா,இசையமைப்பாளர் யுவன் ஷங்கர்ராஜா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. மேலும், இயக்குநர் கரு.பழனியப்பன், ராதாரவி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட சில திரையுலகம் பிரபலங்களே கலந்துகொண்டார்கள். 

மேலும் படத்தின் ட்ரைலர் வெளியான சில மணிநேரத்தில் படத்துக்கு நான் இசையமைக்கவில்லை என யுவன் சங்கர் ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். புதிதாக வந்த தயாரிப்பாளருக்கும் யுவனுக்கும் பேச்சுவார்த்தை இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம் எனப் படக்குழு வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: விஜய் சேதுபதி என்ன சொன்னாரு பாருங்க!

Share this story