அள்ளிக்கொடுக்க நினைத்த 'நம்பர்' ஒன் நடிகை..! 'கிள்ளி'க் கொடுக்க வைத்த காதலன்.!?

அள்ளிக்கொடுக்க நினைத்த 'நம்பர்' ஒன் நடிகை..! 'கிள்ளி'க் கொடுக்க வைத்த காதலன்.!?

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நடிகைகள் நாட்டில் எவ்வளவு கலவரம்,வறுமை என்றாலும் நடிகைகள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை!? உலகம் முழுக்க கொரோனா பாதிப்பால் முடங்கிக் கிடக்கிறது. குறிப்பாக அன்றாடம் வேலைக்கு போனால்தான் சாப்பாடு என்ற நிலையில் உள்ள தொழிலாளர்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகிறது.

அவர்களுக்கு உதவும் பொருட்டு அரசும், தொழிலாளர் அமைப்புகளும் நிதி திரட்டி உதவும் முயற்சியில் இருப்பதை நாடே அறியும்.தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை 25000 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்ட அமைப்பு ஃபெப்சி.அதற்கு நடிகர்கள் பலரும் தங்களால் ‘முடிந்த’அளவு பணமாகவோ. பொருளாகவோ கொடுத்து உதவ முன்வந்திருக்கும் நிலையில்… முதன் முதலாக யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு பெரும் தொகையைக் கொடுத்து பலரையும் புருவம் உயர்த்த வைத்தவர் ‘நம்பர்’ஒன் நடிகை! 

அள்ளிக்கொடுக்க நினைத்த 'நம்பர்' ஒன் நடிகை..! 'கிள்ளி'க் கொடுக்க வைத்த காதலன்.!?

அதைத் தொடர்ந்தே நடிகர்கள் பலரும் சுய நினைவுக்கு வந்து வாரி வழங்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ஆனாலும் நடிகைக்கு நெருக்கமான ஆட்கள் சொன்ன தகவல் அதிர்ச்சி ரகம்..! ஒரு படத்துக்கு தான் வாங்கும் சம்பளம் முழுவதையும் கொடுப்பதாகத்தான் முதலில் முடிவெடுத்திருக்கிறார். ‘அவ்வளவு பணமெல்லாம் வேண்டாம்… இதைக் கொடுத்தால் போதும் என்று ‘குறிப்பிட்ட’ தொகையை முடிவு செய்தது அவரது காதலர்தானாம்! 

சரி,என்னத்த சொல்ல முடியும்..?! இருக்கிற தமிழ் நடிகைகள் ‘கொரோனா’ விழிப்புணர்வு வீடியோ மட்டும் போட்டு தங்கள் சமூக கடமையை சிறப்பாக செய்துவிட்டதாக ‘இன்ஸ்டாகிராம்’ பக்கங்களில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.இவராவது இவ்வளவு கொடுத்திருக்கிறாரே என்று ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்!?

Share this story