அவரை மிஸ் பண்றேன்' : முன்னாள் கணவர் குறித்து மனம் திறந்த நடிகை சோனியா அகர்வால்

அவரை மிஸ் பண்றேன்' : முன்னாள் கணவர் குறித்து மனம் திறந்த நடிகை சோனியா அகர்வால்

இயக்குநர் செல்வராகவன் குறித்து அவரது முன்னாள் மனைவியும் நடிகையுமான சோனியா அகர்வால் மனம் திறந்துள்ளார்.

சென்னை:  இயக்குநர்  செல்வராகவன் குறித்து அவரது முன்னாள் மனைவியும்  நடிகையுமான  சோனியா அகர்வால் மனம் திறந்துள்ளார். 

அவரை மிஸ் பண்றேன்' : முன்னாள் கணவர் குறித்து மனம் திறந்த நடிகை சோனியா அகர்வால்

காதல் கொண்டேன்  படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். இப்படத்தை  தொடர்ந்து புதுப்பேட்டை, கோவில், 7ஜி ரெயின்போ காலனி ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். தன்னை முதல் படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குநர்  செல்வராகவனை 2006 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட சோனியா அகர்வால், கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். 

தற்போது   சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள சோனியா அகர்வால் ‘தனிமை’ படத்தில் இலங்கை அகதியாக யாழினி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில்  பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள சோனியா அகர்வால்  காதல் கணவர் செல்வராகவன் குறித்து பேசியுள்ளார்.

அதில், ‘காதல் கொண்டேன் ஷூட்டிங்கின் முதல் நாள் இன்றும் என் ஞாபகத்தில் உள்ளது. சென்னையில் யாரையும் தெரியாது, மொழி தெரியாது.  செல்வராகவன் என்ன சொன்னாரோ அதை அப்படியே செய்தேன். 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை படங்களுக்குக் கிடைத்த வரவேற்பு தான் நிறைய தமிழ் படங்களில் நடிக்கும் ஆசையை எனக்கு  தந்தது’ என்றார். 

இதைத் தொடர்ந்து செல்வராகவனை ரொம்ப மிஸ் பண்ணுறீங்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ரொம்ப இல்லை. ஆனால்  மிஸ் செய்கிறேன். அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். தற்போது பிரிந்தும் வாழ்ந்து வருகிறேன். அவருடனான பத்து வருடப் பழக்கம் எனக்குள் இன்னும் அவரை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.  செல்வாவிடம் எனக்குப் பிடித்ததே அவரின் வெகுளித்தனம் தான்’ என்று நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை சோனியா அகர்வால். 

Share this story