ஆடையை விமர்சித்த நெட்டிசன்களை அசிங்கப்படுத்திய சமந்தா
திருமணத்திற்குப் பிறகு வைக்கப்படும் தன் ஆடை மீதான விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்துள்ளார் நடிகை சமந்தா
சென்னை: திருமணத்திற்குப் பிறகு வைக்கப்படும் தன் ஆடை மீதான விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்துள்ளார் நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் சமீபத்தில் நடித்த சீமராஜா, யூடர்ன் ஆகிய படங்கள் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில் தனது கணவர் நாக சைதன்யாவுடன் நடிகை சமந்தா ஸ்பெயினில் உள்ள தீவு ஒன்றுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அக்கினேனி குடும்பத்திற்கு சமந்தா கெட்ட பெயரை வாங்கிக் கொடுப்பதாகவும், கவர்ச்சி கிளாமர் தேவை என்றால் எதற்காகத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் விமர்சித்தனர்.
One life and a friekin amazing one it is @pachaclubibiza #workhardpartyharder
A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on
இதற்குத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்திருக்கும் சமந்தா, என்னைத் திருமணத்திற்கு பிறகு இப்படித் தான் உடை உடுத்த வேண்டும் என்று கூறும் அனைவருக்கும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று பதிவிட்டு அடுத்த பதிவில் தனது நடுவிரலை உயர்த்திக் காட்டியுள்ளார். சமந்தாவின் இந்தப் பதிலை பலரும் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.