ஆம்பளையாக இருந்தால் இதை செய்யுங்கடா பாப்போம்: சாவல் விட்ட சின்மயி

ஆம்பளையாக இருந்தால் இதை செய்யுங்கடா பாப்போம்: சாவல் விட்ட சின்மயி

வைரமுத்து விவகாரம் குறித்து தன்னை விமர்சனம் செய்த ஒருவருக்குப் பாடகி சின்மயி சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

சென்னை: வைரமுத்து விவகாரம் குறித்து தன்னை விமர்சனம் செய்த ஒருவருக்குப் பாடகி சின்மயி சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில், பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக  பின்னணி பாடகி சின்மயி,  கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். வைரமுத்துவால் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வருகிறார். சின்மயிக்கு ஆதரவாகப் பல நடிகர், நடிகைகள் குரல் கொடுத்து வந்தனர்.  ஆனால் அவர்கள் யார்மீதும் சின்மயி சட்டப்படி புகார் அளிக்கவில்லை. உண்மையாக இருந்தால் ஏன் புகார் அளிக்கவில்லை எனத் தினமும் பலரும் சின்மயியை வறுத்தெடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் வழக்கறிஞர் ஒருவர் உண்மை கண்டறியும் சோதனை தான் ஒரே வழி என்று இதே போன்ற கேள்வியைக்  கேட்க, ஆத்திரமடைந்த சின்மயி, ‘நான் ரெடி.. மீடியாவை வர சொல்லுங்கள். ஒரே நேரத்தில் இருவருக்கும் நடக்கட்டும். அப்போது உண்மை தெரியும். கணவரை தவிர நீ யாரிடம் படுக்கிறாய் என கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, ஆம்பளையாக இருந்தால் ‘உண்மை கண்டறியும் சோதனைக்கு ஏற்பாடு செய்துவிட்டு கால் செய்யுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சின்மயி விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது.

Share this story