இன்னும் 2 நாள் தான்: மீண்டும் கூடிய மகத்-யாஷ்-ஐஸ் கூட்டணி!

இன்னும் 2 நாள் தான்: மீண்டும் கூடிய மகத்-யாஷ்-ஐஸ் கூட்டணி!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், மீண்டும் மகத், ஐஸ்வர்யா, யாஷிகா கூட்டணி, குறிப்பிட்ட ஒருவரை டார்கெட் செய்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் 2 தினங்களில் நிறைவடையவுள்ளது. இந்த சீசனின் இறுதிப்போட்டியில் ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலக்ஷ்மி ஆகியோர் போட்டிபோடுகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 இறுதிப்போட்டியாளர்களை ஊக்குவிக்க, பிக் பாஸ் வீட்டில் இருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் சிலர் பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ-எண்ட்ரி கொடுத்து வருகின்றனர். அதில் தற்போது மகத், யாஷிகா, டேனி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

இது தொடர்பான புரொமோ வீடியோவில், பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறியபோது அவர் நடந்துக் கொண்டது சகிக்கவில்லை என்று யாஷிகா ஒருவரை டார்கெட் செய்து பேசினார். அதன் பின் பேசிய மகத், இது ஒரு கேம், யாரும் கெட்டவங்க, வில்லன்லாம் கிடையாது. ஆனா, முன்னாடி விட்டு பின்னாடி போய் பேசற சிலர் இருக்காங்க அவங்க தான் மோசம் என தனது கருத்தை டேனியை குறி வைத்து பேசுகிறார் மகத். இன்னும் 2 நாட்களில் எல்லாம் முடிஞ்சி போய்டும் என்று ஐஸ்வர்யா கூறி மகத்தை அடக்குகிறார்.

எப்பா சாமிங்களா பிக் பாஸ் நிகழ்ச்சியே இன்னும் 2 நாள்ல முடிஞ்சி போய்டும். போய் அவங்க அவங்க பொழப்ப பாருங்க.. இன்னும் ஒருத்தர பத்தி ஒருத்தர் கோல்மூட்றது, பின்னாடி பேசுறதுன்னு இருக்காதீங்கன்னு நெட்டிசன்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

Share this story