இயக்குநர் வெற்றிமாறன் – நடிகர் சூரி காம்போவில் ஒரு காமெடி படம்!

இயக்குநர் வெற்றிமாறன் – நடிகர் சூரி காம்போவில் ஒரு காமெடி படம்!

பட்டாம்பூச்சி விற்பவன் கவிதை தொகுப்பை மையமாகக் கொண்டு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை என மிரள வைக்கும் படைப்புகளுக்கு சொந்தக்காரரான இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக  ஒரு புது முயற்சியில் களமிறங்கவுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் – நடிகர் சூரி காம்போவில் ஒரு காமெடி படம்!

அவர் காமெடி  நடிகர் சூரியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.  இந்த படமானது மறைந்த பாடலாசிரியர் நா.முத்து குமார் எழுதிய  ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ கவிதை தொகுப்பை மையமாகக் கொண்டு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 

இயக்குநர் வெற்றிமாறன் – நடிகர் சூரி காம்போவில் ஒரு காமெடி படம்!

இந்த கதையை வெற்றிமாறன்  பொல்லாதவன் படத்திற்கு முன்பே எழுதி வைத்து விட்டதாகவும், அதை இயக்குநர்  பாலு மகேந்திரா பாராட்டியதாகவும் தெரிகிறது.

இயக்குநர் வெற்றிமாறன் – நடிகர் சூரி காம்போவில் ஒரு காமெடி படம்!

வெற்றிமாறனின் வழக்கமான கேங்க்ஸ்டர் படமாக இது இல்லாமல், முற்றிலும் காமெடி படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகளில் வெற்றிமாறன் இறங்கியுள்ளதாகவும் தெரிகிறது. 
 

Share this story