இளம் இயக்குநர் மீது கடுப்பில் இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார்!
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகை நயன்தாரா, இளம் இயக்குநர் ஒருவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகை நயன்தாரா, இளம் இயக்குநர் ஒருவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் நம்பர்.1 நாயகியாக வலம் வரும் நயன்தாரா, அஜித்துடன் ‘விஸ்வாசம்’, தளபதி விஜய்யுடன் ‘தளபதி 63’, சிவகார்த்திகேயன் திரைப்படம் என ஏராளமான முன்னணி ஹீரோக்களின் கமர்ஷியல் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இது மட்டுமல்லாது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘கொலையுதிர் காலம்’, ‘ஐரா’ போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
‘லக்ஷ்மி’ குறும்பட இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஐரா’ திரைப்படத்தில் முதன் முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், க்ளைமேக்ஸ் காட்சிகளை மட்டும் இயக்குநர் மிச்சம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இயக்குநர் சர்ஜுன் முறையாக காட்சிகளை திட்டமிட்டு எடுப்பதில்லை என நயன்தாரா அவர் மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஷூட்டிங்கை தாமதப்படுத்துவதால், படத்தின் தயாரிப்பு தரப்பு தலையிட்டு ஷூட்டிங்கை விரைந்து முடிக்க முயற்சித்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.