என்னை நடிகை என்று நானே ஏமாத்திட்டு இருந்தேன்: நடிகை சாய் பல்லவி!

என்னை நடிகை என்று நானே ஏமாத்திட்டு இருந்தேன்: நடிகை சாய் பல்லவி!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் என்ஜிகே. சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் இதில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். என்ஜிகே படத்தின் இசை மற்றும் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் என்ஜிகே. சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் இதில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். என்ஜிகே படத்தின் இசை மற்றும் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.

இதற்காகச் சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில், சூர்யா, செல்வராகவன், சாய் பல்லவி, யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

என்னை நடிகை என்று நானே ஏமாத்திட்டு இருந்தேன்: நடிகை சாய் பல்லவி!

அந்த விழாவில் பேசிய சாய் பல்லவி, ‘என்.ஜி.கே சூட்டிங் சென்ற போது முதலில் நான் பயந்து கொண்டு தான் இருந்தேன். எனக்கு குறைந்த அனுபவம் தான். அதைவைத்துப் பார்க்கும் போது வீட்டிலிருந்து வசனங்களை கற்று கொண்டு சென்றிருக்கிறேன். நான் யோசிப்பதைக் காட்டிலும் வேற லெவலில் இயக்குநர் செல்வா யோசிக்கிறார்.என் அம்மாவிடம் சொன்னேன். நான் நடிகை என்று என்னை நானே ஏமாத்திட்டு இருந்துருக்கேன். 

ஒரு டேக் அதிகமானால் கூட வருத்தப்படுவேன். சூர்யா தான் எனக்கு ஆறுதல் கூறுவார். அதற்காக அவருக்கு மிகவும் நன்றி. படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் நீடித்தால் பரவாயில்லை என்று தோன்றியது. அதற்கு காரணம் இன்னும் நடிப்பை நன்றாக கற்று கொள்ள வேண்டும் என்பற்காகவே.நான் வேற சாய் பல்லவியாக நடித்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இயக்குநர் செல்வாதான் தான். நான் தப்பு பண்ணுனா தான் தப்பா ஆகிருக்கே தவிர என்னைச் சுற்றி எதுவும் தப்பா ஆனதில்லை.

ngk

 மேலும் படப்பிடிப்பு எனக்கு ஸ்கூல் மாதிரி இருந்தது, லீவு கிடைக்காதா? மழை பெய்யாதா? என்று நினைத்து கொண்டு தான் படப்பிற்குச் செல்வேன். ஷூட்டிங் சமயத்தில் வீட்டிலிருந்து செல்லும் போதே இப்படி நடிகனும், அப்படி நடிகனும் என்று தயாராகத் தான் செல்வேன். ஆனால், படப்பிடிப்பு வேற மாதிரி இருந்தது. அனைவரது அன்பிற்கும் ரொம்ப நன்றி’ என்று கூறியுள்ளார்.

Share this story