என் திருமணம் பற்றி ஏன் இத்தனை பேருக்கு அக்கரை ஏன்? அனுஷ்கா!

என் திருமணம் பற்றி ஏன் இத்தனை பேருக்கு அக்கரை ஏன்? அனுஷ்கா!

அனுஷ்கா மிகுந்த கோபத்தில் இருக்கிறார். தனக்கு திருமணம் செய்து வைப்பதில் ஏன் இத்தனை பேர் மும்முரமாக இருக்கிறார்கள் என்று கேட்கிறார். முதலில் விவாகரத்தான ஒரு கிரிக்கெட் வீரரைத்தான் அனுஷ்கா மணக்கப் போகிறார் என்றார்கள். அப்புறம் பாகுபலி பிரபாஸும் அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று வதந்தி கிளம்பியது, அதை இருவருமே மீண்டும் மீண்டும் மறுத்த போதும் அது தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது. இதெல்லாம் சேர்ந்துதான் அனுஷ்காவை கோபப் படுத்தி இருக்கிறது.

என் திருமணம் பற்றி ஏன் இத்தனை பேருக்கு அக்கரை ஏன்? அனுஷ்கா!

என்னுடைய திருமணம் இப்போதைக்கு இல்லை என்று நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அது எனது தனிப்பட்ட விருப்பம், உரிமை, அதற்குள் மற்றவர்கள் மூக்கை நுழைப்பது தவறில்லையா. எனக்குத் திருமணம் நடக்கும் போது நானாக ஊரைகூட்டி சொல்லாவிட்டாலும் அதை வெளியே தெரியாமல் மறைக்க முடியுமா?. அடுத்தவர் அந்தரங்கம் குறித்து செய்தி வெளியிடும் போது அது சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தைப் பாதிக்காதா?. எப்படி இவர்களால் இப்படி செய்தி வெளியிட முடிகிறது என்று சமீபத்தில் ஒரு பத்திரிகை பேட்டியில் பொங்கி இருக்கிறார். சினிமாவைப் பொறுத்த வரை கடைசியாக சைரா நரசிம்ம ரெட்டியில் தலைகாட்டினார்.

என் திருமணம் பற்றி ஏன் இத்தனை பேருக்கு அக்கரை ஏன்? அனுஷ்கா!

இப்போது ஹேமந்த் மதூர்கரின் நிஷாபந்தம் படத்தில் மாதவனுடன்  நடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் அஞ்சலி, மைக்கெல் மேட்சென், சுப்புராஜ், ஷாலினி பாண்டே, ஸ்ரீநிவாஸ் அலசரலா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

Share this story