ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் கிளம்பும் சுசி லீக்ஸ், சின்மயி வெளியிட்ட வீடியோ!

ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் கிளம்பும் சுசி லீக்ஸ், சின்மயி வெளியிட்ட வீடியோ!

சுசி லீக்ஸ் விவகாரம் குறித்து தற்போது பாடகி சின்மயி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை: சுசி லீக்ஸ் விவகாரம் குறித்து தற்போது பாடகி சின்மயி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பின்னணிப் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தனுஷ், டி.டி, ஹன்சிகா, த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, ராணா, ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி கோலிவுட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் பாடகி சின்மயியின் புகைப்படங்களும் அடங்கும். இதையடுத்து “தன்னுடைய கணக்கிலிருந்து சில புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின. அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை. அக்கவுன்ட்டை ஹேக் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாடகி சுசித்ரா சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். 

 

இதையடுத்து  சுசி லீக்ஸ் விவகாரத்தை முன்வைத்து இளைஞர் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பி தன்னைத் தொந்தரவு செய்துவருவதாகவும், சுசி லீக்ஸ் மூலம் நீ எப்படிப்பட்டவள் என்பது தெரிந்துவிட்டது, மிகவும் நல்லவள் மாதிரி நடிக்க வேண்டாம் எனக் கூறி ஆபாச வார்த்தைகளால் பேசி வருவதாகவும் சின்மயி தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் சின்மயி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகச் சுசி லீக்ஸ் காரணத்தால் வேசி போன்ற ஆபாச வார்த்தைகளால் என்னைப் பற்றி பேசி வந்தனர். அது உண்மை இல்லை என்று கூறினாலும் யாரும் நம்பவில்லை.அந்தச் சமயத்தில் சுசித்ரா என்ன மனநிலையில் இருந்தார் என்று எங்களுக்குத் தெரியும். அவர் கணவர் கார்த்திக் அவருக்கு மனநிலை சரியில்லை என்று என்னிடம் கூறினார். இதையடுத்து மன்னிப்பு கேட்டு இமெயில் அனுப்பினார்.அதை அப்போது நான் வெளியிடவில்லை.அது நாகரிகமும் இல்லை.ஆனால் இப்போது அது குறித்து சுசித்ராவின் கணவர் கார்த்திக் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதை நான் என் பேஸ்புக்கில் வெளியிடப்போகிறேன்.எனக்கு  ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. உண்மை ஒரு நாள் வெளியாகும்’ என்று கூறியுள்ளார்.
 

Share this story