ஓவியா குழந்தை மாதிரி :எல்லாரையும் ஈஸியா நம்பிடுவா; ஆரவ் வைரல் வீடியோ!

ஓவியா குழந்தை மாதிரி :எல்லாரையும் ஈஸியா நம்பிடுவா; ஆரவ் வைரல் வீடியோ!

ஓவியா ஒரு குழந்தை மாதிரி, அவர் எளிதாக எல்லோரையும் நம்பி விடுவார் என்று நடிகரும் பிக் பாஸ் வெற்றியாளருமான ஆரவ் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஓவியா ஒரு குழந்தை மாதிரி, அவர் எளிதாக எல்லோரையும் நம்பி விடுவார் என்று நடிகரும் பிக் பாஸ் வெற்றியாளருமான ஆரவ் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவராலும் ரசிக்கப்பட்ட நபரான ஓவியா, காதல் வயப்பட்டு ஏமாற்றம் அடைந்ததால் போட்டியைவிட்டு வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதை வென்ற ஓவியா, நிகழ்ச்சியைவிட்டு வெளியேறிய பின்னர் மக்களிடம் பேராதரவு கிடைத்தது. ஓவியாவுக்கென இளைஞர்கள் தனி ஆர்மியை உருவாக்கிக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதைத்தொடர்ந்து அவ்வப்போது ஓவியா – ஆரவ் சந்தித்துக்கொள்ளும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், மீண்டும் அவர் சின்னதிரைக்கு திருப்பியுள்ள ஓவியா,  தனியார் தொலைக்காட்சி ஒன்றில்  நடன நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்குகிறார். இவருடன் நடன இயக்குநர் பிருந்தா, நடிகர் நகுல் உள்ளிட்டோர் நடுவர்களாக பங்கேற்றவுள்ளனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்த புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.அதில், ஓவியாவுக்கு ஆரவ் வாழ்த்து கூறுகிறார். அதில், ஹாய் ஹெலு, எப்படி இருக்க, ஓவியாவை பத்தி சொல்லனும்னா, குழந்தை மாதிரி எல்லாரையும் நம்பிடுவாங்க. கொஞ்சம் சிரிச்சு பேசுனா நம்பிடுவாங்க.குழந்தைங்க மிட்டாய் வாங்கி கொடுத்தா நம்புவாங்கல அந்த மாதிரி ஒரு குழந்தை தான், அவங்க எனக்கு மனதுக்கு ரொம்ப நெருக்கமானவங்க என்று கூறியுள்ளார்.இதை கேட்டு ஓவியாவின் முகத்தில் ஏகத்துக்கும் வெட்கம் பொங்கி வருகிறது.  

Share this story