ஓவியா லிவிங் டு கெதரில் இருப்பது இவருடனா? உண்மை நிலவரம் என்ன?

ஓவியா லிவிங் டு கெதரில் இருப்பது இவருடனா? உண்மை நிலவரம் என்ன?

பிக் பாஸ் போட்டியாளர்களான ஓவியாவும் ஆரவ்வும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: பிக் பாஸ் போட்டியாளர்களான ஓவியாவும் ஆரவ்வும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ்வும், ஓவியாவும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே காதல் ஏற்பட்டது. பின்னர் ஆரவ் இதை மறுத்த காரணத்தினால் ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். 

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவரும் சகஜமாக பழகி வருகிறார்கள். அவ்வப்போது இவர்கள் பொது இடங்களிலும் ஒன்றாக கலந்து கொள்ளும் புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன. இதையடுத்து நேற்று ஆரவ் தனது பிறந்தநாளை  கொண்டாடினார். ஆரவ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியா மற்றும் ஆரவ்வின் நண்பர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டினர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ஆரவ் மற்றும் ஓவியா இருவரும் லிவிங் டு கெதரில் இருந்து வருவதாகவும், இவர்கள்  இருவரும் சென்னை ஓஎம்ஆரில் தனியாக வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால்  இதை மறுத்துள்ள அவர்களின் நண்பர்கள் வட்டாரத்திலோ, அது உண்மை இல்லை, அவர்கள் கடந்த காலத்தை மறந்து நல்ல நண்பர்களாக இருந்து வருவதாக கூறியுள்ளனர். ஏற்கனவே ஓவியா ஒரு பேட்டியில் , பிக் பாஸ் வீட்டில் இருந்ததை விட சிறந்த உறவுமுறை எங்களுக்குள் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story