கணவருடன் சேர்ந்து எடுத்த அபிமான புகைப்படம் !! ரசிகர்களுக்கு காட்சிப்படுத்திய பிரபல நடிகை !!

கணவருடன் சேர்ந்து எடுத்த அபிமான புகைப்படம் !! ரசிகர்களுக்கு காட்சிப்படுத்திய பிரபல நடிகை !!

மலையாள நடிகை நஸ்ரியா நாஜிம் இன்ஸ்டாகிராமில் தனது கணவர் பஹத் பாசிலுடன் எடுத்துக்கொண்ட ஒரு த்ரோபேக் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

மலையாள திரையுலகின் மிகவும் அபிமான ஜோடிகளில் ஃபஹத் பாசில் மற்றும் நஸ்ரியா நாஜிம் தம்பதியும் ஒருவர். அவர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட இந்த நேரத்தில், நஸ்ரியா இன்ஸ்டாகிராமில் கணவர் ஃபஹத் பாசிலுடனான தருணத்தைப் பகிர்ந்து கொண்டார், மேலும் அவர்கள் எவ்வளவு அன்பா தம்பதி என்பதை ரசிகர்களுக்கு காண்பிக்க அவர்களது புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். 

[video:https://www.instagram.com/p/B_7BoWTpp5H/?utm_source=ig_web_copy_link]

மே 8, 2020 அன்று, நடிகர் நஸ்ரியா நாஜிம் தனது இன்ஸ்டாகிராமில் தனது மற்றும் பஹத் பாசிலின் ஒரு த்ரோபேக் படத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்த ஜோடி ஒரு விழாவில் தங்கள் நேரத்தை அனுபவித்து மகிழ்வதைக் காணலாம். 

நஸ்ரியா நாஜிம் மற்றும் ஃபஹத் பாசிலின் காதல் கதை ஒரு சினிமாவுக்கு இணையானது. அவர்கள் இருவரும் பெங்களூர் டேஸ் படப்பிடிப்பின் போது முதல் முறையாக சந்தித்தனர். இந்த படப்பிடிப்பின்போதுதான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது, சில மாதங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 2014 இல் நிச்சயதார்த்தம் செய்து 2014 ஆகஸ்டில் திருமணம் செய்து கொண்டனர்.

[video:https://www.instagram.com/p/B9isw5_JNPb/?utm_source=ig_web_copy_link]
ஃபஹத் பாசில் ஒரு நேர்காலின்போது, நஸ்ரியா நாஜிம்தான் தன்னிடம் வந்து காதலை வெளிப்படுத்தியதாக தெரிவித்தார். அவருடைய வெளிப்படையான பேச்சை நேசிப்பதாகவும் அதுவே அவரை காதலிக்க உந்துகோலாக இருந்தாகவும் எனவே அவரையே திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். 

[video:https://www.instagram.com/p/B8lrPswpJS1/?utm_source=ig_web_copy_link]

தனது அடுத்த படமான மாலிக் படத்தின் போஸ்டரை 2020 மார்ச் 4ல் தனது பேஸ்புக் கணக்கில் ஃபஹத் பாசில் பதிவிட்டிருந்தார். முதலில், மாலிக் ஒரு கேங்க்ஸ்டர் படம் என்று கூறப்பட்டது. ஆனால் இயக்குனர் மகேஷ் நாராயண் படம் ஒரு அரசியல் த்ரில்லர் என்று தெளிவுபடுத்தினார். சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான கிளர்ச்சியை உள்ளடக்கிய நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் என்று கூறப்படுகிறது.

Share this story