கண்ணருகில் வெட்டுக்காயம்: ஷூட்டிங் ஸ்பாட்டில் மாநகரம் பட ஹீரோவுக்கு நடந்த விபரீதம்!

கண்ணருகில் வெட்டுக்காயம்: ஷூட்டிங் ஸ்பாட்டில் மாநகரம் பட ஹீரோவுக்கு நடந்த விபரீதம்!

மாநகரம் பட ஹீரோ சந்தீப் கிஷனுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் கண்ணருகில் வெட்டுக்காயம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: மாநகரம் பட ஹீரோ சந்தீப் கிஷனுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் கண்ணருகில் வெட்டுக்காயம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சந்தீப் படத்தின்.  இவர் ஏற்கனவே ‘யாருடா மகேஷ்’  ‘மாயவன்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘நரகாசூரன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இந்த நிலையில் இவர் நாகேஸ்வர ரெட்டி இயக்கத்தில் ‘தெனாலி ராமகிருஷ்ணா’ என்ற படத்தில்  நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில், ஸ்டண்ட் காட்சியின் போது, எதிர்பாரா விதமாக சந்தீப் கிஷன் முகத்தில் இடது கண்ணிற்கு கீழ் கண்ணாடி பீஸ் கிழித்து. இதில் அவருக்கு ரத்தம் கொட்டியதால் படப்பிடிப்பு ஸ்பாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து, கர்னூலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சந்தீப் தற்போது நலமாக இருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவத்தின் போது ஸ்டண்ட் மேன் ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் ட்வீட் செய்திருந்தார். மேலும், இந்த விபத்திற்கு காரணம் ஸ்டண்ட் இயக்குநர் தான் என்று பரவிய வதந்தியை முற்றிலும் அவர் மறுத்துள்ளார்.
 

Share this story