காஜல் அகர்வாலுக்கு ஏன் முத்தம் கொடுத்தேன்? ஒளிப்பதிவாளர் விளக்கம்

காஜல் அகர்வாலுக்கு ஏன் முத்தம் கொடுத்தேன்? ஒளிப்பதிவாளர் விளக்கம்

‘கவச்சம்’ பட டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்தது குறித்து ஒளிப்பதிவாளர் விளக்கம் அளித்துள்ளார்.

ஹைதராபாத்: ‘கவச்சம்’ பட டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்தது குறித்து ஒளிப்பதிவாளர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், சமீபத்தில் ‘கவச்சம்’ என்ற தெலுங்கு படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது படக்குழுவினரை புகழ்ந்து பேசிய காஜல், ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடுவையும் புகழ்ந்தார்.

சற்றும் எதிர்பாராத விதமாக காஜல் அகர்வாலை கட்டுப்பிடித்து முத்தம் கொடுத்தார் சோட்டா கே நாயுடு. பொதுமேடையில் நடந்த இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.

சோட்டா நாயுடு கூறுகையில், ‘காஜல் அகர்வாலுடன் பணியாற்றுவதில் எப்போதும் எனக்கு மகிழ்ச்சி. மறைந்த நடிகை சவுந்தர்யாவுக்கு பின் காஜல் அகர்வாலை எனக்கு ரொம்ப பிடிக்கும். தற்போதுள்ள நடிகைகளில் சிறப்பாக நடிப்பவர் காஜல். அவர் நடித்த பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். ஒரு குடும்பமாக பழகி வருகிறோம். மேடையில் அந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடும் போது ஒரு பாசத்தால் முத்தம் கொடுத்தேன். அவர் மீதுள்ள ஈர்ப்பினால் கொடுக்கவில்லை. இதை பெரிதுப்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Share this story