கால்நடை மருத்துவர் கொலையில் கோடிகளை கொட்ட திட்டமிடும் ராம்கோபால் வர்மா-கற்பழிப்பை காசாக்க படமெடுக்கிறார்…
ஹைதராபாத்தில் நடந்த திஷா கற்பழிப்பு குறித்து ,ராம் கோபால் வர்மா ஒரு சமூக படமெடுப்பதாக அறிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு,அங்கு ஒரு இளம் பெண் (ஒரு டாக்டராக இருந்தவர்) நான்கு மிருகத்தனமான ஆண்களால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு, காவல்துறையால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஹைதராபாத்தில் நடந்த திஷா கற்பழிப்பு குறித்து ,ராம் கோபால் வர்மா ஒரு சமூக படமெடுப்பதாக அறிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு,அங்கு ஒரு இளம் பெண் (ஒரு டாக்டராக இருந்தவர்) நான்கு மிருகத்தனமான ஆண்களால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு, காவல்துறையால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை வைத்து பேசிய வர்மா “எனது அடுத்த படத்திற்கு ‘திஷா’ என்று பெயரிடப்பட்டுள்ளேன் , அது திஷா கற்பழிப்பு பற்றியது. நிர்பயாவின் கொடூரமான கொலைக்குப் பிறகு (2012 ல், டெல்லியில்), திஷாவை கற்பழித்து எரித்ததன் மூலம் தங்கள் கொடூர முகத்தை சமூகத்துக்கு குற்றவாளிகள் வெளிக்காட்டினர். அந்த கற்பழிப்பாளர்களின் சிந்தனையையும் , செயல்முறையையும் ,மேலும் அவர்கள் ஏன் கொன்றார்கள் என்பது பற்றி எனது படம் விவரிக்கும்”. என்று இன்று கூறினார்.
My next film is titled “DISHA” which is going to be about the DISHA rape ..After the brutal rape and horrific murder of NIRBHAYA, the DISHA rapists went further in their ghastliness in actually burning the poor girl with petrol #DishaNirbhayaTruth pic.twitter.com/3SiiesIgR8
— Ram Gopal Varma (@RGVzoomin) February 1, 2020
“கற்பழிப்பவர்கள் முந்தைய கற்பழிப்பாளர்களின் தவறுகளிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள முயற்சிக்கிறார்கள், ஆனால் அவர்களின் கற்பழிப்புகளைத் தடுக்கமுடியவில்லை (sic) என்பது நம் அனைவருக்கும் ஒரு பயங்கரமான பாடத்தை என் படம் அம்பலப்படுத்தும். நம் நாட்டில் பலாத்காரம் செய்பவரை , ஏபி சிங் (நிர்பயா கற்பழிப்பாளர்களை தூக்கிலிட்டதை ஒத்திவைத்தவர்)போன்ற வக்கீல்களால் பல ஆண்டுகளுக்கு காப்பாற்ற முடியும், மக்கள் எப்போதும் திஷாவுக்கு வழங்கப்பட்ட என்கவுண்டர் நீதியை கொண்டாடுவார்கள் “என்று ஆர்ஜிவி எழுதினார்.
Film “DISHA” will detail the thought process of the DISHA rapists as in why they killed her..They dint want to do the mistake of NIRBHAYA rapists by leaving the girl alive so that she could lead the police to them #DishaNirbhayaTruth ..The below pic shows where the act happened pic.twitter.com/OJJO10Mic6
— Ram Gopal Varma (@RGVzoomin) February 1, 2020