கேரளாவில் களைகட்டும் சர்கார்: நடிகர் விஜய்-க்கு பிரம்மாண்ட கட்-அவுட்!
கேரளாவில் நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படம் வெளியாவதைக் கொண்டாட விஜய் ரசிகர்கள் வித்தியாசமான முயற்சியில் களமிறங்கியுள்ளார்.
கொல்லம்: கேரளாவில் நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படம் வெளியாவதைக் கொண்டாட விஜய் ரசிகர்கள் வித்தியாசமான முயற்சியில் களமிறங்கியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவ.6ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. ’சர்கார்’ கதை திருட்டு தொடர்பான சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தமிழகம் மட்டுமல்லாது கேரளாவிலும் தளபதி விஜய்க்கு செல்வாக்கு அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், ‘சர்கார்’ படத்தின் ரிலீசை வித்தியாசமாகக் கொண்டாட கேரள தளபதி ரசிகர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து திருச்சூரில் உள்ள கார்த்திகா திரையரங்கில் அதிகாலை 5.30 மணி முதல் மறுநாள் நள்ளிரவு 2.45 மணி வரை மொத்தம் 8 காட்சிகளைத் திரையிட திட்டமிட்டுள்ளது.
Biggest Ever Cutout in Indian Cinema 175 Ft Launched by #KollamNanbans ?#Sarkar #SarkarDiwali
Unstoppable Sarkar craze in kerala and WW@actorvijay @sunpictures @ARMurugadoss pic.twitter.com/XFHzLmVjmb
— Nikkil (@onlynikil) November 2, 2018
இந்நிலையில் கேரளா மாநிலம் கொல்லத்தில் விஜய்க்கு 175 அடியில் மிகப் பிரம்மாண்ட கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்களால் வைக்கப்பட்டுள்ள இந்த கட்-அவுட்டை பலரும் பார்த்து வியந்து வருகின்றனர்.