கொட்டும் மழையில் சிம்பு வீட்டின் முன்பு போராட்டம்.. கொந்தளிச்ச ரசிகர்கள்…

கொட்டும் மழையில் சிம்பு வீட்டின் முன்பு போராட்டம்.. கொந்தளிச்ச ரசிகர்கள்…

ரசிகர் மன்றத்தில் நிலவிவரும் குழப்பத்தை தீர்க்கக்கோரி சிம்பு வீட்டின் முன்பு கொட்டும் மழையில் ரசிகர்கள் போராட்டம் நடத்தினர்.

தமிழ் சினிமாவின் இளம் நடிகராக இருப்பவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தற்போது ஈஸ்வரன் திரைப்படம் உருவாகி உள்ளது. சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது.

ஈஸ்வரன் படத்தை 28 நாட்களில் நடித்து முடித்து கொடுத்திருக்கிறார் சிம்பு. இதையடுத்து வரிசையாக நிறைய படங்களில் ஒப்பந்தமாகி உள்ளனர். இதன் படபிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சிம்பு தற்போது ஆளே மாறிவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கொட்டும் மழையில் சிம்பு வீட்டின் முன்பு போராட்டம்.. கொந்தளிச்ச ரசிகர்கள்…

இதனிடையே ஈஸ்வரன் பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, இங்க சில பேரு எவன் எதைச் செஞ்சாலும் குறை சொல்லிட்டே இருக்காங்க. போட்டி, பொறாமைதான் இருக்கு. தல்ல அட்வைஸ் பண்றதை நிறுத்தணும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை இருக்கு. சோசியல் மீடியாவுல அவன் சொல்றான், இவன் சொல்றான்னா கேட்காதீங்க. வெளிய எதுவுமே இல்லை. மனசை சுத்தம் பண்ணுங்க என ரசிகர்களுக்கு அட்வைஸ்களை அள்ளி வீசினார்.

கொட்டும் மழையில் சிம்பு வீட்டின் முன்பு போராட்டம்.. கொந்தளிச்ச ரசிகர்கள்…

இந்நிலையில் சிலம்பரசன் வீட்டின் முன்பு இன்று ரசிகர்கள் போராட்டம் நடத்தினர். தற்போது ரசிகர் மன்றத்தில் நிலவிவரும் குழப்பத்தால் ரசிகர்கள் நிரந்தர முடிவை எடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், சிம்பு ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவரை மாற்ற கோரியும் வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். கொட்டு மழையில் ரசிகர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this story