சகாயம் ஐஏஎஸ் எழுதிய தமிழ் பாடலுக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்!

சகாயம் ஐஏஎஸ் எழுதிய தமிழ் பாடலுக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்!

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் எழுதிய வரிகளில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள ‘தமிழ் மொழியை ஏற்றிடுவோம்’ என்ற பாடல் இன்று மாலை ரிலீசாகிறது.

சென்னை: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் எழுதிய வரிகளில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள ‘தமிழ் மொழியை ஏற்றிடுவோம்’ என்ற பாடல் இன்று மாலை ரிலீசாகிறது.

தமிழ் கலாச்சாரம், தொன்மையான தமிழ் மொழி மீது அதீத பற்று வைத்துள்ள நடிகர் ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து அது குறித்த கருத்துக்களை தெரிவித்தும், ரசிகர்களை ஊக்குவித்தும் வருகிறார். சமூக பிரச்னைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவர் பகிரும் பதிவுகளும் தமிழ் மொழியிலேயே இருக்கும்.

சமீபத்தில் ஒரு தமிழனாக மார்தட்டிக் கொள்வதாகக் கூறி தனது கையெழுத்தினை தமிழில் மாற்றியதாக ட்விட்டரில் அறிவித்தார். அவரது ரசிகர்களையும் அதை பற்றி சிந்திக்குமாறு அறிவுறுத்தினார்.

இந்நிலையில், தமிழ் மொழியின் பெருமையை போற்றும் விதமாக புதிய பாடல் ஒன்றை ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரி சகாயம் எழுதிய ‘தமிழ் மொழியை ஏற்றிடுவோம்’ என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இது குறித்த அறிவிப்பை ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘சங்கம் வைத்து பல்லாயிரம் ஆண்டுகள் மொழி வளர்த்த என் முன்னோர்களின் வழி நின்று, ’தமிழ் மொழியின் ஏற்றத்திற்கு’ ஐயா சகாயம்.இஆப., அவர்களது வரிகளில் என் சிறு பங்களிப்பாக இசையமைத்துள்ள பாடல்..’ என்று பதிவிட்டுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மற்றும் ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

 

 

 

 

Share this story