சக நடிகர்களே என் திறமையை வெளிக்கொண்டு வருகிறார்கள் – பிரியாமணி

சக நடிகர்களே என் திறமையை வெளிக்கொண்டு வருகிறார்கள் – பிரியாமணி

திரையுலகில் தன்னுடன் நடிக்கும் நடிகர்களே தன்னுடைய திறமையை அதிகம் வெளிப்படுத்துவதாக நடிகை பிரியாமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தேசிய விருது பெற்ற தென்னிந்திய நடிகை பிரியாமணி, தற்போது வெப்சீரிஸில் ஆதீத் என்ற தொடரில் நடித்துள்ளார். ஏற்கனவே அவர் தி பேமிலி மேன் என்ற வெப்சீரிசில் நடித்துள்ளதால் இது அவருக்கு 2வது தொடராகும். இந்த தொடர் குறித்து பிரியா மணி கூறுகையில், தன்னுடன் நடித்த மனோஜ் பாஜ்பாயி, ராஜீவ் காண்டேல்வால், சஞ்சய் சூரி, ராணா தகுபாட்டி ஆகியோர் தன்னுடைய நடிப்புக்கு பெரிதும் உதவியதாக பெருமையாக தெரிவித்துள்ளார். ஓ

சக நடிகர்களே என் திறமையை வெளிக்கொண்டு வருகிறார்கள் – பிரியாமணி

.டி.டி.யில் இதுவரை பிரியாமணி 2 தொடர்கள் நடித்து சாதனை படைத்துள்ளார். தி பேமிலி மேன் படத்திற்கு முன்னரே அதீத் தொடரில் நடித்ததாகவும், தொழில் நுட்ப ரீதியாக இந்தியில் இதுதான் எனக்கு முதல் பட எனவும் பிரியாமணி தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவை பொறுத்தவரை தான் நடிகையாக உயர்வதற்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. ராஜீவ் மற்றும் சஞ்சய் தங்களது திறமைகளை அழகாக வெளிப்படுத்துகின்றனர். அவர்களுடன் பணியாற்றுவது புது அனுபவத்தை தருவதாக பிரியாமணி தெரிவித்துள்ளார். 

சக நடிகர்களே என் திறமையை வெளிக்கொண்டு வருகிறார்கள் – பிரியாமணி
சக நடிகரான மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் புதுப்புது மேஜிக்குகளை செய்கிறார். நான் தற்போதே அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்வதை தவறவிடக்கூடாது என கருதுகிறேன். தனுஜ் பார்மா இயக்கத்தில் உருவாகியுள்ள அதீத் ஜீ5 இல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. ஒரு சிப்பாயின் மர்ம மரணத்தை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில் பிரியாமணி ஒரு தாயாக நடிக்கிறார்.

Share this story