சிரஞ்சீவி நடிக்க இருந்த படத்தை தட்டிச் சென்ற பிரபாஸ்

சிரஞ்சீவி நடிக்க இருந்த படத்தை தட்டிச் சென்ற பிரபாஸ்

நாக் அஸ்வின் இயக்கிய மகாநதி படம் 2018-ல் வெளிவந்து, மூன்று பிரிவில் தேசிய விருதுகளை வென்றது. இரண்டு வருடங்களுக்கு பிறகு இவரின் இரண்டாவது படம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவுனம் தயாரிக்கிறது. தாங்கள் தயாரிக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்க இருப்பதாக அந்நிறுவனம் வீடியோ வெளியிட்டுள்ளது.

 

நாக் அஸ்வின் இயக்கிய ‘மகாநதி’ படம் 2018-ல் வெளிவந்து, மூன்று பிரிவில் தேசிய விருதுகளை வென்றது. இரண்டு வருடங்களுக்கு பிறகு இவரின் இரண்டாவது படம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவுனம் தயாரிக்கிறது. தாங்கள் தயாரிக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்க இருப்பதாக அந்நிறுவனம் வீடியோ வெளியிட்டுள்ளது.

சிரஞ்சீவி நடிக்க இருந்த படத்தை தட்டிச் சென்ற பிரபாஸ்

தெலுங்கு சினிமா வட்டாரங்களின் படி, மெகா ஸ்டார் சிரஞ்சீவி தான் இந்த கதையை பிரபாஸுக்கு அனுப்பி கேட்குமாறு கூறியுள்ளார். மறுபக்கம் பிரபாஸ், அர்ஜுன் ரெட்டி இயக்குனர் சாந்தீப் ரெட்டி வங்கா மற்றும் வம்சி படைப்பள்ளி ஆகியோரிடம் கதை கேட்பதில் பிசியாக இருந்த போது சிரஞ்சீவி பரிந்துரைத்த இந்த கதையை கேட்டுள்ளார். அஸ்வின் அந்த கதையை கூறியதும் பிரபாஸுக்கு அது மிகவும் பிடித்துவிட்டதாம். 

மகாநதி பட விழாவின் போது அஸ்வினி தத், தனது மருமகன் இந்த கால கட்டத்திற்கு ஏற்றாற்போல் ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதை வைத்திருப்பதாகவும், அதை சிரஞ்சீவியிடம் சொல்ல இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், இந்த கதையை சிரஞ்சீவி நிராகரித்து விட்டதால் இப்போது இந்த கதை பிரபாஸ் வசம் போயிருக்கிறது. பிரபாஸ் நடிப்பதால் இந்த படம் இன்னும் பெரிய அளவில் மக்களிடம் ரீச் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிரஞ்சீவி நடிக்க இருந்த படத்தை தட்டிச் சென்ற பிரபாஸ்

மறுபுறம், ராதா கிருஷ்ணா குமார் இயக்கும் தனது 20 வது படத்தின் படப்பிடிப்பில் பிரபாஸ் தற்போது பிஸியாக உள்ளார். அந்த படத்திற்குப் பிறகு, பிரபாஸ் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this story