சீரியல்களின் புதிய எபிசோடுகள் எப்போது ஒளிபரப்பாகும்.. விஜய் டிவி அறிவிப்பு…

சீரியல்களின் புதிய எபிசோடுகள் எப்போது ஒளிபரப்பாகும்.. விஜய் டிவி அறிவிப்பு…

கொரோனா ஊரடங்கு காரணமாக சின்னத்திரை படப்பிடிப்புகள் 50 நாட்களுக்கும் மேலாக ரத்து செய்யப்பட்டன. இதனால் தொலைக்காட்சி நிறுவனங்கள் புதிய எபிசோட்கள் இல்லாமல் பழைய நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்து வந்தன. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும், அதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள. அந்த வகையில் 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக்கொள்ளவும்  தமிழக அரசு அனுமதியளித்தது. இதையடுத்து சீரியல்கள்  படப்பிடிப்பௌ தொடங்கும் பணியில் தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் முன்னணி பொழுதுபோக்கு சேனலான விஜய் தொலைக்காட்சி சீரியல்களின் புதிய  எபிசோட்கள் எப்போது ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ளது. இது தொடர்பாக விஜய் டிவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் வாரம் முதல் விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘பாரதி கண்ணம்மா’, ‘காற்றின் மொழி’, ‘ஆயுத எழுத்து’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘தேன்மொழி’ ஆகிய தொடர்கள் வழக்கம்போல் புதிய எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகும். நேயர்கள் தவறாமல் கண்டு மகிழலாம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரியல்களின் புதிய எபிசோடுகள் எப்போது ஒளிபரப்பாகும்.. விஜய் டிவி அறிவிப்பு…

மேலும்  வரும் ஜூன்-8 முதல், இரவு 9 மணிக்கு ‘செந்தூரப் பூவே’ என்ற புதிய மெகா சீரியல் ஒளிபரப்ப இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இதில் ‘பாண்டவர் பூமி’, ‘நேசம் புதுசு’, ‘பீஷ்மர்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமான  நடிகர் ரஞ்சித்,  முதன் முதலாக சீரியலில் நடிக்கிறார்.

சீரியல்களின் புதிய எபிசோடுகள் எப்போது ஒளிபரப்பாகும்.. விஜய் டிவி அறிவிப்பு…

Share this story