சுசி லீக்ஸால் விவாகரத்து ஆகிவிட்டது… பாடகி சுசித்ரா உருக்கம்!

சுசி லீக்ஸால் விவாகரத்து ஆகிவிட்டது… பாடகி சுசித்ரா உருக்கம்!

கணக்கை ஹேக் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாடகி சுசித்ரா சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்

கடந்த ஆண்டு  2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பின்னணிப் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தனுஷ், டி.டி, ஹன்சிகா, த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, ராணா, ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி கோலிவுட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சுசி லீக்ஸால் விவாகரத்து ஆகிவிட்டது… பாடகி சுசித்ரா உருக்கம்!

அதில் பாடகி சின்மயி-யின் புகைப்படங்களும் அடங்கும். இதையடுத்து “தன்னுடைய கணக்கிலிருந்து சில புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின. அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை. கணக்கை ஹேக் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாடகி சுசித்ரா சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். இதன் பிறகு சுசித்ராவுக்கு மனநிலை சரியில்லை  என்று பரவலாகச் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில்  தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சுசித்ரா, ‘4.5 லட்சம் பேர் பின் தொடரும் என் ட்விட்டர் பக்கத்தை யாரோ தவறாக பயன்படுத்தினர். இதனால் பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. நான் மன அழுத்தத்திற்கு ஆளானேன். என் விவகார்த்தும் அதே சமயத்தில் நடந்ததால் நான் மன அழுத்தத்தில் தள்ளப்பட்டேன். தேவையில்லாம தனுஷ், அனிருத் எல்லாரையும் சம்பந்தப்படுத்திடாங்க. அதை நான் பார்க்கவே இல்லை.  மார்ஃபிங் செய்யப்பட்டதா என்று கூட எனக்குத் தெரியாது. அதை யார் செய்தார்கள் என்பது எனக்கு தெரியவரும் என்று நினைக்கிறேன். 

 இதனால் நான் படிப்பில் கவனம் செலுத்தலாம் என்று நினைத்தேன். எனக்கு சமையல் செய்வது பிடிக்கும். அதனால் லண்டனுக்குச் சென்று பிரெஞ்ச் குக்கிங் கற்றுக் கொண்டு திரும்பியிருக்கிறேன். அதை யூடியூபில் சுசி குக் என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட உள்ளேன். சுசி லீக்ஸ் என்று கிளம்பி விட்டவர்கள் மத்தியில் அவர்கள் மூக்கில் குத்துவது போல இந்த பெயரை பயன்படுத்த உள்ளேன்’ என்று கூறியுள்ளார். 

சமீபத்தில் பாடகி சுசித்ராவை காணவில்லை என்று தங்கை சுஜிதா போலீசில் புகார் அளித்தார். சொத்து பிரச்னை காரணமாகத் தனது தங்கை புகார் கொடுத்துள்ளதாகவும், தான் வீட்டில் இருக்க பிடிக்காமல் ஓட்டலில் தங்கியிருந்ததாகவும் பாடகி சுசித்ரா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

Share this story