டேட்டிங் ஆப்-பில் பிரியங்கா சோப்ரா முதலீடு!
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி டேட்டிங் ஆப் ஒன்றில் முதலீடு செய்துள்ளார்.
மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி டேட்டிங் ஆப் ஒன்றில் முதலீடு செய்துள்ளார்.
பம்பில் என்ற டேட்டிங் ஆப்-பை இந்தியாவில் தொடங்க நடிகை பிரியங்கா சோப்ரா முதலீடு செய்துள்ளார். அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் டேட்டிங் ஆப்-கள் சாதாரணமாக செய்லபட்டு வருகின்றன. அதன் மூலம் பெண்களும், ஆண்களும், தங்களுக்கு பொருத்தமான ஜோடிகளை தேர்வு செய்கின்றனர்.
ஆனால், இதுபோன்ற டேட்டிங் ஆப்-கள் இந்தியாவில் அத்தனை பாதுகாப்பானதாக இல்லை என்ற கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி நடிகை பிரியங்கா சோப்ரா இந்தியாவில் இதனை தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது.
A new chapter for me! I am so excited to partner with @bumble and @holbertonschool as an investor. I’m honored to join two companies that strive to expand gender diversity in the tech space, and make a social impact for the greater good… let’s do this!! pic.twitter.com/xBdC13XE0n
— PRIYANKA (@priyankachopra) October 4, 2018
பம்பில் ஆப்-பில் முதலீட்டாளராக மட்டுமல்லாமல் பங்குதாரராகவும், ஆலோசகராகவும் பிரியங்கா சோப்ரா செய்லபடுவார் என பம்பில் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெண்கள் மீது முதலீடு செய்வதை சமூக மாற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாக நம்புகிறேன். பெண்களுக்கு காதல் வேண்டும், நட்பு வேண்டும், வேலை வேண்டும். அவர்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக இதில் முதலீடு செய்கிறேன் என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
பம்பில் டேட்டிங் ஆப் மூலம் பெண்கள் பாதுகாப்பாகவும், பாலியல் தொல்லைகளில் சிக்காமல், ஏமாறாமல் இருக்கும் வகையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலில் பெண்களே தங்களது விருப்பத்திற்கு ஏற்ற ஆண்களுக்கு ரிக்வெஸ்ட் கொடுத்து டேட்டிங்கை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரையுலகில் நடிகை, தயாரிப்பாளர், சமூக சேவகர் என பன்முகம் கொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து புதிய முயற்சியை எடுத்துள்ளார்.