தனது அப்பா-அம்மா போட்டோவை பதிவிட்டு ராணுவ வீரர்களை நினைவுகூர்ந்த பிரபல நடிகை!

தனது அப்பா-அம்மா போட்டோவை பதிவிட்டு ராணுவ வீரர்களை நினைவுகூர்ந்த பிரபல நடிகை!

பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டுக்கு சென்ற முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான  நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஒரு சர்வதேச நடிகையாக வலம்  வருகிறார். பிரியங்கா சோப்ரா, கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னைவிட 10 வயது குறைந்த காதலரான பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை கரம் பிடித்தார். பொதுவாகவே பிரியங்கா சோப்ரா வெளியிடும் போட்டோக்கள் பேசும் பொருளாக மாறும். காரணம் அவரின் உடை அந்த அளவிற்கு ஸ்பெஷலாக இருக்கும். 

தனது அப்பா-அம்மா போட்டோவை பதிவிட்டு ராணுவ வீரர்களை நினைவுகூர்ந்த பிரபல நடிகை!

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது அம்மா, அப்பா புகைப்படத்தை பதிவிட்டு, “எனது பெற்றோர் இருவரும் இந்திய இராணுவத்தில் பணியாற்றினர் .. அதனால்தான் உலகெங்கிலும் உள்ள இராணுவ குடும்பங்களுடன் இதுபோன்ற உறவை நான் உணர்கிறேன். இன்று நமது சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை சேவையில் கொடுத்து  வீழ்ந்த  அனைத்து  ஹீரோக்களையும் பற்றி சிந்திக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Share this story