தமிழிலில் பேசவா? கோவாவில் டாப்ஸி காட்டிய தைரியம்!

தமிழிலில் பேசவா? கோவாவில் டாப்ஸி காட்டிய தைரியம்!

உங்கள் எல்லோருக்கும் இந்தி தெரியுமா என்று கேட்டார்.அதற்குப் பதிலாக ரசிகர்கள் கூட்டம் கேலியாக குரல் கொடுத்தது.

கோவாவில் 50-வது இண்டர் நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்  நடந்துகொண்டு இருக்கிறது. இந்த விழாவில்தான் ரஜினிகாந்தும்,ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராமும் கவுரவிக்கப் பட்டார்கள்.இந்த விழாவின் ஒரு பகுதியாக,பிரபல இயக்குநர்கள், நடிக,நடிகையருடன் ரசிகர்கள் சந்த்தித்துத் பேசும் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படுவது வழக்கம்.

தமிழிலில் பேசவா? கோவாவில் டாப்ஸி காட்டிய தைரியம்!

அது போன்ற ஒரு கலந்துரையுடலில் நேற்று நடிகை டாப்ஸி கலந்து கொண்டார்.
உரையாடல் ஆங்கிலத்தில் நடந்து கொண்டிருந்த போது, வட இந்திய ரசிகர் ஒருவர் டாப்ஸியை இந்தியில் பேசச் சொன்னார்.இதைக் கேட்ட டாப்ஸி,கூடி இருந்த ரசிகர்களை பார்த்து,உங்கள் எல்லோருக்கும் இந்தி தெரியுமா என்று கேட்டார்.அதற்குப் பதிலாக ரசிகர்கள் கூட்டம் கேலியாக குரல் கொடுத்தது.

அதைச் சுட்டிக்காட்டிய டாப்ஸி மீண்டும் ஆங்கிலத்திலேயே பேசத்துவங்க,அந்த வடஇந்திய ரசிகர் ‘ நீங்கள் பாலிவுட் நடிகை,நீங்கள் இந்தியில்தான் பேசவேண்டும்’ என்று தொடர்ந்து வற்புறுத்த  கோபமடைம்த டாப்ஸி’ நான் தமிழிலும்,தெலுங்கிலும்கூட நடித்திருக்கிறேன்.உங்கள் கேள்விக்கு நான் தமிழில் பதில் சொல்லவா’ என்று கேட்டார்.டாப்ஸியின் இந்த தைரியத்தை உலகப்பட விழா ரசிகர்கள் பாராட்டினார்கள்.

Share this story