துப்புரவுத் தொழிலாளியுடன் புத்தாண்டு கொண்டாடிய கவுதமி! – வைரலாகும் படம்

துப்புரவுத் தொழிலாளியுடன் புத்தாண்டு கொண்டாடிய கவுதமி! – வைரலாகும் படம்

புத்தாண்டு நள்ளிரவைப் பல பிரபலங்களும் நட்சத்திர ஹோட்டல்களில் கொண்டாடியபோது, நடிகை கவுதமி துப்புரவுத் தொழிலாளர்களுடன் கொண்டாடிய படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

புத்தாண்டு நள்ளிரவைப் பல பிரபலங்களும் நட்சத்திர ஹோட்டல்களில் கொண்டாடியபோது, நடிகை கவுதமி துப்புரவுத் தொழிலாளர்களுடன் கொண்டாடிய படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
ரஜினியுடன் தர்ம துரை, குரு சிஷ்யன் என்று 1980களின் இறுதியில் 90களின் தொடக்கத்தில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை கவுதமி. திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர், பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மீண்டும் சினிமாவுக்குள் வந்தார். நடிகர் கமலுடன் லிவ்விங்டுகெதராக வாழ்ந்து வந்தார். கமலின் படங்களில் ஆடைவடிவமைப்பு உள்ளிட்ட விஷயங்களை கவனித்து வந்தவர், பாபநாசம் படத்தில் ஜோடியாக நடித்தார். திடீரென்று மகளின் வாழ்க்கையை கருத்தில்கொண்டு கமலைவிட்டுப் பிரிவதாக அறிவித்தார்.புற்றுநோயிலிருந்து மீண்ட அவர் அது பற்றிய விழிப்புணர்வைப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார். மேலும், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். 

2020 புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சாலையை தூய்மை செய்து கொண்டிருந்த துப்புரவுத் தொழிலாளி ஒருவருடன் அவர் செல்ஃபி எடுத்து சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பலரும் கவுதமியை பாராட்டினாலும், விமர்சனங்களும் எழுந்துள்ளது. இப்போத்தான் துப்புரவுத் தொழிலாளி உங்கள் கண்ணுக்குத் தெரிகிறாரா, பப்ளிசிட்டிக்காக ஏன் இப்படி செய்கின்றீர்கள் என்று பலரும் கவுதமியை தாளித்து வருகின்றனர்.

புத்தாண்டு நள்ளிரவைப் பல பிரபலங்களும் நட்சத்திர ஹோட்டல்களில் கொண்டாடியபோது, நடிகை கவுதமி துப்புரவுத் தொழிலாளர்களுடன் கொண்டாடிய படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
ரஜினியுடன் தர்ம துரை, குரு சிஷ்யன் என்று 1980களின் இறுதியில் 90களின் தொடக்கத்தில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை கவுதமி. திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர், பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மீண்டும் சினிமாவுக்குள் வந்தார். நடிகர் கமலுடன் லிவ்விங்டுகெதராக வாழ்ந்து வந்தார். கமலின் படங்களில் ஆடைவடிவமைப்பு உள்ளிட்ட விஷயங்களை கவனித்து வந்தவர், பாபநாசம் படத்தில் ஜோடியாக நடித்தார். திடீரென்று மகளின் வாழ்க்கையை கருத்தில்கொண்டு கமலைவிட்டுப் பிரிவதாக அறிவித்தார்.புற்றுநோயிலிருந்து மீண்ட அவர் அது பற்றிய விழிப்புணர்வைப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார். மேலும், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். 
2020 புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சாலையை தூய்மை செய்து கொண்டிருந்த துப்புரவுத் தொழிலாளி ஒருவருடன் அவர் செல்ஃபி எடுத்து சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பலரும் கவுதமியை பாராட்டினாலும், விமர்சனங்களும் எழுந்துள்ளது. இப்போத்தான் துப்புரவுத் தொழிலாளி உங்கள் கண்ணுக்குத் தெரிகிறாரா, பப்ளிசிட்டிக்காக ஏன் இப்படி செய்கின்றீர்கள் என்று பலரும் கவுதமியை தாளித்து வருகின்றனர்.

Share this story