நடிகர் சூர்யாவுக்கு நன்றி சொன்ன செல்வராகவன்

நடிகர் சூர்யாவுக்கு நன்றி சொன்ன செல்வராகவன்

என்.ஜி.கே திரைப்படம் முடிவுயடைந்ததையடுத்து படத்தின் இயக்குனர் செல்வராகவன் நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்

சென்னை: என்.ஜி.கே திரைப்படம் முடிவுயடைந்ததையடுத்து படத்தின் இயக்குனர் செல்வராகவன் நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

நடிகர் சூர்யா- செல்வராகவன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட இருந்தது. இயக்குநர் செல்வராகவன் உடல்நலம் சரியில்லாததால் ‘என்.ஜி.கே’ ஷூட்டிங் தாமதமானது. 

சூர்யா – செல்வராகவன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. இதனால் சமூகவலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் படம் குறித்த அப்டேட்டை வெளியிடுமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். 

இந்நிலையில் என்.ஜி.கே. படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் அதில் “சூர்யாவுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்தது. அவருடைய நடிப்புத் திறமை மற்றும் அர்ப்பணிப்பைக் கண்டு மிகவும் வியப்படைந்தேன். என்.ஜி.கே. படக்குழுவினர் சார்பாக அவருக்கு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Share this story