பரம்பரை சொத்தை பதுக்கி வைத்திருந்த நடிகர் ; விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை

பரம்பரை சொத்தை பதுக்கி வைத்திருந்த நடிகர் ; விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை

அது ஒரு நடிகரின் வீடு!.அப்போது அவர் ஒரே ஒரு படத்தில் கருப்பு போர்வையைப் போர்த்திக்கொண்டு வந்து ‘காட்சியளித்து’ அவர் செய்த கதாபாத்திரத்தின் பெயரால் பெரிய நடிகராக கருதப்பட்டவர்.அவருக்கு ஒரே ஒரு மகன்.நடனம் என்று சகல பயிற்சிகளிலும் தேர்ந்த மகன்.அன்று பிரபலமாக இருந்த ஆக்‌ஷன் பட இயக்குநர் எடுத்த ‘தமிழ்மாசம் பொறந்தாச்சு’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, தமிழ் நாட்டின் அடுத்த காதல் இளவரசன் பிறந்து விட்டதாகக் கொண்டாடப்பட்டு கொண்டு இருந்த நேரம்.
அந்த சமயத்தில் ஒரு நாள் நடிகருக்கு ஒரு அதிர்ச்சி சம்பவம் நேர்ந்தது.நடிகர் தனக்கு தமிழ்,தெலுங்கு மற்றும் தென்னகமெங்கும் படங்கள் குவிவதாகவும் , இலங்கையிலும் ஐரோப்பாவிலும் தொழில் முதலீடுகள் இருப்பதாகவும் சின்ன கேப் கிடைக்கும் போதெல்லாம் அடித்து விடத் துவங்கி இருந்த நேரம் கூட! அவருக்கு சென்னையின் நம்பர் ஒன் வணிக பகுதியில் அரை ஏக்கரில் தனிவீடு இருந்தது.அதில் உள்ளே இருந்தபடியே தான் ஐரோப்பா டூரில் இருப்பதாகக் கதைவிடக்கூடியவர்.( இப்போது அந்த இடத்தில் ,பிரமாண்ட நகைக்கடை வந்து விட்டது) அந்த வீட்டுக்கு அன்று வருமானவரித்துறை அதிகாரிகள் வந்து குவிந்தனர்.

பரம்பரை சொத்தை பதுக்கி வைத்திருந்த நடிகர் ; விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை

இரண்டு கேட்டுகளும் பூட்டப்பட்டன.நடிகர் எத்தனை பதறியும் அவர்கள் இரக்கமே இல்லாமல் சோதனையில் இறங்கினர்,ஏனென்றால் அவர்களுக்கு கிடைத்த இன்ஃபார்மேசன் அப்படி.நான்கு இரும்புப் பெட்டிகள் நிறைய பரம்பரை சொத்துக்களை வெளி உலகுக்குத் தெரியாமல் பதுக்கி வைத்திருக்கிறார் என்பது அவர்களுக்கு கிடைத்த தகவல்! என்ன அது..!? அதை எங்கே பதுக்கி இருக்கிறார் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் வீட்டின் மூலை முடுக்கெல்லாம் தேடி களைத்துப் போனார்கள்.

பரம்பரை சொத்தை பதுக்கி வைத்திருந்த நடிகர் ; விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை
கடைசியில் அவர்களில் ஒருவருக்கு ஒரு சந்தேகம் வந்தது.அந்த வீட்டைச் சுற்றி ஏகப்பட்ட காலி இடம் இருந்தது.பிரமாண்ட தூங்கு மூஞ்சி மரங்களைத் தவிர அதில் ஏதுமே இல்லை.ஒரு வேளை ,அந்த நான்கு இரும்புப் பெட்டிகளும் இங்கே புதைத்து வைத்து இருப்பாரோ என்பதுதான் அந்த வ.வ துறை அதிகாரியின் சந்தேகம். உடனே மெட்டல் டிடக்ட்டர் கொண்டு வந்து சோதித்தால் சக்சஸ்! நான்கு பெட்டிகளும் வெளியே எடுக்கப்பட்டன.இரண்டு பெட்டிகளில் அப்பா பெயரும்,இரண்டு பெட்டிகளில் மகன் பெயரும் எழுதப்பட்டு இருந்தது! வந்திருந்த அதிகாரிகள் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் இருந்திருக்கிறது.சினிமாவில் முதல் முறையாக ஒரு தங்க வேட்டை ஆடிய உற்சாகம் அவர்களது நடவடிக்கைகளில் தெரிந்திருக்கிறது!
நடிகர் முன்னிலையில் பெட்டியைத் திறக்கத் தயாரானார்கள் அதிகாரிகள். அப்போது நடிகர் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒரு விசித்திரமான வேண்டுகோள் வைத்தாராம்! அந்தப் பெட்டிகளுக்குள்  என்ன இருந்தது என்பதை வெளியே சொல்ல வேண்டாம்… அப்படிச் செய்தால் எந்தத் தயாரிப்பாளரும் இனி என்னையோ என் மகனையோ நடிக்க கூப்பிட மாட்டார்கள் என்று நா தழுதழுக்க வேண்டுகோள் வைத்ததாகவும் ஒரு செய்தி உண்டு! அதையெல்லாம் பொருட் படுத்தாமல் பெட்டியைத் திறந்த அதிகாரிகள் அதிர்ச்சியில் வாயடைத்துப் போனார்களாம்! அந்த பெட்டிகளிலிருந்தது என்ன தெரியுமா,எத்தனை பணம் கொடுத்தும்,உலக அழகியையே உடன் நடிக்க வைத்தும் கூட தயாரிப்பாளருக்கும் , இயக்குநருக்கும் டிமிக்கி கொடுத்து விட்டு அப்பாவும் மகனும் பதுக்கி வைத்திருந்த ‘ நடிப்பு’ தான் அதிலிருந்ததாம்!!

பரம்பரை சொத்தை பதுக்கி வைத்திருந்த நடிகர் ; விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை
இந்தக் கதையை நம்பாதவர்களுக்கு இன்னொரு கதை.தெக்கத்திய இயக்குநர் ஒருவரின் படத்தில் அப்பா நடிகர் ஒருமுறை நடித்தார்.நடிகர் பேசிய ஆங்கிலத்தைக் கேட்ட இயக்குனருக்கு அவரை வெகுவாக பிடித்துப் போய்விட்டது!  அதுவே, இயக்குனருக்கும் நடிகருக்குமான நடப்பு மிக நெருக்கமாக காரணமாக இருந்திருக்கிறது.!? படப்பிடிப்புக்கு இடைவெளியில் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதெல்லாம்… நடிகர்,தனது ஐரோப்பிய வியாபாரத் தொடர்புகள், இலங்கையில் அவரது முன்னோருக்கு இருந்த தொழிற்சாம்ராஜ்யம், அது இலங்கை உள்நாட்டுப் போரால் அழிந்த சோகக் கதை என தன் வாழ்வில் நடந்த நல்லது கெட்டது அத்தனையும் இயக்குனரிடம் பகிர்ந்து கொள்வாராம். ஒரு சிறப்பான நடிகருக்குப் பின்னால் இவ்வளவு வலி நிறைந்த துயங்கள் எல்லாம் இருப்பதை கேட்டு ரொம்பவே மனம் கலங்கி  விட்டாராம் அந்த தெக்கத்திய வெள்ளந்தி இயக்குநர்.

எப்பேர்ப்பட்ட தொழில் சாம்ராஜ்யத்தின் வாரிசு..!?  இப்படி சினிமாவில் நடித்து வயிற்றைக் கழுவ நேர்ந்து விட்டதே என்று இயக்குனரின் கண்களில் கண்ணீர் துளிர்திருக்கிறது! எதற்குமே கலங்காத இயக்குனர் ஏன் கண்கலங்குகிறார் என்று யூனிட் ஆட்களுக்கும் அதிர்ச்சி! எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் மொத்தப் படத்தையும் முடித்துவிட்டு சென்னைக்கு வந்திருக்கிறார் அந்த இயக்குனர்.
அதன் பிறகு தன்னை சந்திக்க வருகிற எல்லோரிடமும் நடிகரின் ஃபிளாஷ் பேக் பற்றிச் சொல்லிச் சொல்லி வியப்பாராம்! எல்லாம் அவர் அறிமுகப்படுத்திய அந்த வாரிசு நடிகையை சந்திக்கும் வரைதான்! என்னாச்சு… என்று நீங்கள் அதிர்ச்சியடைவதை முதலில் நிறுத்துங்கள்.

பரம்பரை சொத்தை பதுக்கி வைத்திருந்த நடிகர் ; விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை
பூவரசம் பூ பூத்ததை பாட்டாக சொல்ல வந்த நடிகையிடம் படப்பிடிப்புக்கு நடுவே பேசிக்கொண்டிருந்திருக்கிறார் அந்த இயக்குநர்.அப்போது பேச்சின் போக்கில் நடிகை, இலங்கையில் கழிந்த தன் இளமைப் பருவம் பற்றியும்,கண்டிக்கு ரயிலில் போனது பற்றியும் சொல்லச் சொல்ல கண்களை அகல விரித்து ஆச்சர்யமாக கேட்டுக்கொண்டிருந்த இயக்குநர்,அந்த பெட்ஷீட் அப்பா நடிகரின் பெயரைச் சொல்லி ‘அந்த ட்ரெய்ன்லாம் அவர் குடும்ப சொத்து தெரியுமா.!?’ என்று வெகுளியாகக் கேட்டிருக்கிறார்.அதோடு நில்லாமல் ‘அவர்களின் சொந்த ரயில்வே கம்பெனிகள் எல்லாம் உள்நாட்டுப் போரில் அழிந்த பிறகுதான் அவர் நடிக்கவே வந்திருக்கார் தெரியுமா..?! என்று மேற்கொண்டு கேட்டதில் அந்த நடிகை சிரித்து உருண்டதில் அன்று படப்பிடிப்பையே பாதியில் நிறுத்திவிட்டு ‘ஐல் ஷூட் தட் ….’ என்று கோபத்தோடு கிளம்பிய தெக்கத்தி இயக்குநரைச் சமாதானம் செய்து படப்பிடிப்பை கண்டின்யூ பண்ணுவதற்குள் மொத்த யூனிட்டுக்கும் போதும் போதுமென்று ஆகிவிட்டதாம்..!?
அவர் இப்போதும் அதே கெத்துடன் வலம் வந்து கொண்டுதான் இருக்கிறார்.வேறு வீட்டில் பிறந்திருந்தால் அஜித்துக்கும் விஜய்க்கும் டஃப் கொடுத்திருக்க கூடய அவரது மகன் இப்போதும் அப்பாவின் கால்களை ஒரு செல்ல பாமரெனியன் குட்டிபோல  சுற்ற!. சமீபத்தில்கூட இந்தியில் பெரிய வெற்றி பெற்று , விருதுகளைக் குவித்த ஒரு படத்தின் உரிமையை தன் மகனுக்காக பெரிய விலைகொடுத்து வாங்கி இருக்கிறார்.இது முதன் முறை அல்ல.இதற்கு முன்பும் இப்படி நல்ல படங்களை வாங்கி தன் மகனை வைத்து தமிழில் எடுத்திருக்கிறார்,சில வற்றை அவரே இயக்கியும் இருக்கிறார்.எதுவும் தேறவில்லை.இந்த முறை ஒரு பிரபல ரீமேக் இயக்குநரை ஒப்பந்தம் செய்திருக்கிறார் என்று செய்திகள் வருகின்றன. ஆனால் அவரையும் தனி ஒருவனாகச் செயல்பட விடுவாரா,இல்லை குறுக்கே விழுந்த் குழப்புவாரா என்பது விரைவில் தெரியவரும்.

சுவாரசியத்திற்காகவோ,சிக்கலிலிருந்து தப்பிக்கவோ மனிதர்கள் பொய் சொல்வது சகஜம் ஆனால்,நம்ம ஆளுக்கு பொழுது போக்கே பொய் சொல்வதுதான். அவர் காலையில் சொல்லும் குட்மார்னிங்குக்கு பிறகு,அவர் வாயிலிருந்து வரும் அடுத்த வார்த்தையே பொய்யாகத்தான் இருக்கும் என்பது அவருக்கு நெருக்கமானவர்கள் அடிக்கும் கமெண்ட்!.

Share this story