‘பரியேறும் பெருமாள்’ டீமை வாழ்த்திய கமல்ஹாசன்!

‘பரியேறும் பெருமாள்’ டீமை வாழ்த்திய கமல்ஹாசன்!

பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

சென்னை: பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

’காலா’ இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்துக்கு மக்களிடத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.. கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு நடித்துள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தை அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

‘பரியேறும் பெருமாள்’ டீமை வாழ்த்திய கமல்ஹாசன்!

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே மிகுந்த வரவேற்பு கிடைத்ததால், திரையரங்குகளில் காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன், பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோரை நேரில் அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது ட்வீட்டில், ’மக்கள் மனமேறி அமர்ந்துவிட்ட பரியேறும் பெருமாளுக்கு என் வாழ்த்துக்கள். தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் பாராட்டுக்கள். இந்த நற்பணியை தொடருங்கள்..’ என ட்வீட்டியுள்ளார். கமல்ஹாசனை பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் நேரில் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆணவக் கொலைகள் விபத்துக்களாகவும், தற்கொலைகளாகவும் சித்தரிக்கப்பட்டு மூடி மறைக்கப்படுவதை, வன்மத்தை தூண்டாமல் நடுநிலையாகவும், மிக எளிமையாகவும் சொல்லப்பட்டிருக்கும் இந்த படத்துக்கு நாளுக்கு நாள் வரவேற்பு கூடுகிறது.

Share this story