பிக் பாஸ் ஃபேமிலியுடன் நைட் ஷோ படத்துக்கு போன சிம்பு!
பிக் பாஸ் பிரபலங்கள் ஜனனி, மகத், ஐஸ்வர்யா, ஹரிஷ் கல்யாண், ரித்விகா ஆகியோர் நடிகர் சிம்புவுடன் சேர்ந்து நைட் ஷோ படம்m பார்த்துள்ளனர்.
சென்னை: பிக் பாஸ் பிரபலங்கள் ஜனனி, மகத், ஐஸ்வர்யா, ஹரிஷ் கல்யாண், ரித்விகா ஆகியோர் நடிகர் சிம்புவுடன் சேர்ந்து நைட் ஷோ படம்m பார்த்துள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஜனனி, மகத், ஐஸ்வர்யா, ஹரிஷ் கல்யாண், ரித்விகா ஆகியோர் சிம்புவுடன் சேர்ந்து ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் நைட் ஷோவிற்கு சென்றுள்ளனர். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸில் கலந்துக் கொண்டவர்களுடன் நெருக்கமாக இருந்து வரும் சிம்பு, முன்னதாக போட்டியில் இருந்து வெளியேறிய மகத்தை சந்தித்து வாழ்த்துக் கூறினார். அவரைத் தொடர்ந்து சென்றாயன் உள்ளிட்டோரை பார்த்து சிம்பு பரிசுகளையும் வழங்கினார்.
About last night! #CCV pic.twitter.com/oOUYdxY7Ni
— Janani (@jan_iyer) October 3, 2018
இந்நிலையில், தற்போது பிக் பாஸ் போட்டி முடிந்து டைட்டிலை தட்டிச் சென்ற ரித்விகா, இறுதிப்போட்டியில் இருந்த ஜனனி, ஐஸ்வர்யா ஆகியோருடன் சிம்பு ஊர் சுற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சிம்பு நடிப்பில் வெளியான ‘செக்கச்சிவந்த வானம்’ திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்து வருகிறது.
சிம்பு, தனது புதிய பிக் பாஸ் நண்பர்களுடன் சேர்ந்து ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை சத்யம் சினிமாஸில் கண்டுகளித்துள்ளார்.