பிக் பாஸ் 2 டைட்டில் வின்னர் யார்? இன்றுடன் முடிகிறது வாக்குப்பதிவு!

பிக் பாஸ் 2 டைட்டில் வின்னர் யார்? இன்றுடன் முடிகிறது வாக்குப்பதிவு!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்றுடன் நிறைவடைகிறது

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்றுடன் நிறைவடைகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. கடந்த ஜூன்.17ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கமாக 100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த சீசனில் 106 நாட்கள் கூடுதலாக ஒளிபரப்பாகிறது.

இதன் இறுதிப்போட்டி நாளை (3.9.2018) நடைபெறுவதால், இந்த சீசனில் இறுதிப்போட்டியாளர்களான ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலக்ஷ்மி, ஜனனி ஆகியோரில் ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். பிக் பாஸ் வெற்றியாளரை நிர்ணயம் செய்யும் வாக்கெடுப்பு இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

பிக் பாஸ் 2 டைட்டில் வின்னர் யார்? இன்றுடன் முடிகிறது வாக்குப்பதிவு!

மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் ரித்விகா முதலிடத்திலும், பிக் பாஸின் அன்பால் இரண்டாம் இடத்தில் ஐஸ்வர்யாவும், இவர்களை தொடர்ந்து விஜயலக்ஷ்மி, ஜனனி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். பிக் பாஸின் இறுதிப்போட்டி ரசிகர்களிடத்தில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share this story