பிரபுதேவாக்கு நன்றி சொன்ன மகன்!

பிரபுதேவாக்கு நன்றி சொன்ன மகன்!

பிரபுதேவாவின் மகன் தன் அப்பாவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததில் நன்றி கூறிய வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது

சென்னை: பிரபுதேவாவின் மகன் தன் அப்பாவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததில் நன்றி கூறிய வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது.

நடிகரும்  இயக்குநர் பிரபுதேவாவுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டது திரையுலகினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவாவுக்கு இந்த உயரிய விருது கிடைத்ததற்கு பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது மிகப் பெரிய கவுரவம் என்றும் மேலும் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரபுதேவா ரம்லத் தம்பதியினரின் மகன் தனது அப்பாவுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டது குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “என்னுடைய அப்பாவுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்ததற்கு எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அப்பாவுக்கு விருது கிடைத்ததற்கு நான் ரொம்பவும் ஜாலியாக இருக்கேன்” என்று பேசியிருக்கிறார். 

நயன்தாரா காதலுக்குப் பின் பிரபுதேவாவின் முதல் மனைவி ரம்லத் குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில் இப்போது திடீரென்று அவரது பதினெட்டு வயது மகன் அப்பாவுக்கு வாழ்த்து சொல்லி பேசியிருப்பது திரையுலகின் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. மகனின் இந்த வீடியோவை தனது டுவிட்டரில் பதிவிட்டு பிரபு தேவாவுக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார் நடிகை தமன்னா. 
 

Share this story