பிரியங்கா சோப்ரா, அனுராக்காஷ்யப் டொரொன்டோ சர்வதேச திரைப்பட விழாவின் தூதர்களாக நியமனம்!

பிரியங்கா சோப்ரா, அனுராக்காஷ்யப் டொரொன்டோ சர்வதேச திரைப்பட விழாவின் தூதர்களாக நியமனம்!

டொரொன்டோ சர்வதேச திரைப்பட விழாவின் தூதர்களாக அழைக்கப்பட்ட 50 பிரபல திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்களில் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

பிரியங்கா சோப்ரா, அனுராக்காஷ்யப் டொரொன்டோ சர்வதேச திரைப்பட விழாவின் தூதர்களாக நியமனம்!

செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 19 வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில்,  முதன்முறையாக டிஜிட்டல் திரையிடல்கள் மற்றும் விர்ச்சுவல் ரெட் கார்பெட் போன்ற அம்சங்களை அறிமுகப்டுத்தியுள்ளனர்.

ஆஸ்கார் வென்ற இயக்குநர்களான மார்ட்டின் ஸ்கோர்செஸி, அல்போன்சோ குரோன், டைகா வெயிட்டி, அவா டுவெர்னே, ரியான் ஜான்சன், டெனிஸ் வில்லெனுவே மற்றும் நடிகர்கள் நிக்கோல் கிட்மேன், நாடின் லபாகி, ரிஸ் அகமது, இசபெல் ஹப்பர்ட், ஜாங் ஜிஃபி ஆகியோருடன் இந்தியாவிலிருந்து அனுராக் காஷ்யப் மற்றும் பிரியங்கா  சோப்ரா பங்கு பெற உள்ளனர்.

Priyanka Chopra will join Martin Scorsese & Nicole Kidman on ...

“2020 ஆம் ஆண்டில் நாம் எதிர்கொள்ளும் உலகளாவிய மாற்றங்களை நாம் ஒருபோதும் எதிர்பார்த்திருக்க முடியாது. 1976 ஆம் ஆண்டில் திருவிழாவின் ஆரம்பம் எங்கள் வழிகாட்டும் ஒளியாகத் தொடங்கியது. டிஐஎஃப்எஃப் 2020 இன் பதிப்பானது திரைப்படத்தின் ஆழ்ந்த அன்பு, எங்கள் விசுவாசமான பார்வையாளர்கள் மீதான ஆர்வம், தொழில்துறையின் மீதான அர்ப்பணிப்பு மற்றும் முழு மனதையும் பிரதிபலிக்கிறது ”என்று டிஐஎஃப்எஃப் நிர்வாக இயக்குநரும் இணைத் தலைவருமான ஜோனா விசென்ட் கூறினார்.

Share this story