பிரியமுடன் நன்கொடை வழங்கிய ப்ரியங்கா சோப்ரா -"கொடை வழங்கி கொரானாவுக்கு விடை கொடுங்கள் "

பிரியமுடன் நன்கொடை வழங்கிய ப்ரியங்கா சோப்ரா -"கொடை வழங்கி கொரானாவுக்கு விடை கொடுங்கள்  "

பிரதம மந்திரி ‘மோடியின் கேர்ஸ்’ நிதிக்கு பல பாலிவுட் பிரபலங்கள் நன்கொடை அளித்து வருகிறார்கள். இப்படி நன்கொடை அளித்த பிரபலங்களின் பட்டியலில் பாலிவுட் நடிகை   பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது அமெரிக்க கணவர் நிக் ஜோனாஸ் ஆகியோர் இணைந்துள்ளனர். செவ்வாயன்று  சமூக ஊடகங்களில்  இந்த ஜோடி பல தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்துள்ளதை பகிர்ந்து கொண்டார்கள் .பிரியங்கா  நன்கொடை வழங்கிய தொண்டு நிறுவனங்களில் யுனிசெஃப், கூன்ஜ், ஃபீடிங் அமெரிக்கா, , நி கிட் ஹங்க்ரி , ஐ.ஏ.எச்.வி, கிவ் இந்தியா, பிரண்ட்ஸ் ஆஃப் அசிமா மற்றும் பிரதமர் மோடியின் கேர்ஸ் ஃபண்ட் ஆகியவை அடங்கும்.

[video:https://www.instagram.com/p/B-YmgbcDFK7/?utm_source=ig_web_copy_link]

ஒவ்வொரு தொண்டு நிதி நிறுவனத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்த பிரியங்கா சோப்ரா ஊடகத்தில் எழுதினார், “உலகிற்கு முன்னெப்போதையும் விட இப்போது எங்கள் உதவி தேவை. இந்த நிறுவனங்கள் கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதன் மூலம் அற்புதமான பணிகளை செய்கின்றன. அவர்கள் பசித்தவர்களுக்கு (பள்ளி குழந்தைகள் உட்பட) உணவளிக்கின்றனர். அவர்கள்  குறைந்த வருமானம் மற்றும் வீடற்றவர்களுக்கு உதவுதல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் எங்கள் சகாக்களுக்கு ஆதரவளித்தல் போன்ற பணிகளை செய்கிறார்கள் .அவர்களின்   பணிக்கு பிரியங்கா நன்றி தெரிவித்ததோடு,, மேலும் நன்கொடை வழங்கவும் அனைவரையும்  கேட்டுக்கொண்டார்.

Share this story