‘புதுப்பேட்டை 2’ கண்டிப்பா நடக்கும்; இயக்குநர் செல்வராகவன் உறுதி!
தனுஷ் நடிப்பில் வெளியான ‘புதுப்பேட்டை 2’ திரைப்படம் நேரம் வரும்போது நடக்கும் என இயக்குநர் செல்வராகவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை: தனுஷ் நடிப்பில் வெளியான ‘புதுப்பேட்டை 2’ திரைப்படம் நேரம் வரும்போது நடக்கும் என இயக்குநர் செல்வராகவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடித்த ‘புதுப்பேட்டை’ திரைப்படம் வித்தியாசமான முறையில் ரவுடீசம் பேசிய திரைப்படம். முதலில் இந்த படத்துக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில், பின்னர் இப்படத்துக்காக தனி ரசிகர்கள் உருவகியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தாதா படங்களில் ஒன்றான ‘புதுப்பேட்டை’ படத்தை சமீபத்தில் பார்த்து ரசித்ததாகவும், மைண்ட் புலோயிங் என்றும் நடிகர் சந்தீப் கிஷான் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதற்கு இயக்குநர் செல்வராகவன் நன்றி தெரிவித்திருந்தார்.
இதனிடையே ரசிகர் ஒருவர், ‘சார் புதுப்பேட்டை ஒரு மாஸ்டர் பீஸ் படம். அதன் இரண்டாம் பாகத்துக்காக இன்னும் காத்திருக்கிறேன்’ என்று ட்வீட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த செல்வராகவன், ‘நேரம் வரும்போது நடக்கும் ப்ரோ’ என்று குறிப்பிட்டிருந்தார்.
Time will come bro. It will happen. ??? https://t.co/KtUNU5vYnk
— selvaraghavan (@selvaraghavan) October 6, 2018
இயக்குநர் செல்வராகவனின் இந்த தகவல் புதுப்பேட்டை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது சூர்யா நடிப்பில் என்.ஜி.கே திரைப்படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். விரைவில் இப்படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.