’பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’- வைரலாகும் பிரபலங்களின் விழிப்புணர்வு வீடியோ…

’பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’- வைரலாகும் பிரபலங்களின் விழிப்புணர்வு வீடியோ…

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு கூட ஒருவர் மட்டுமே வெளியே வந்து செல்கின்றனர். கொரோனா பயத்தால் மக்கள் அக்கம்பக்கத்தினரிடம் பேசுவதைக் கூட தவிர்த்து வருகின்றனர்.

’பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’- வைரலாகும் பிரபலங்களின் விழிப்புணர்வு வீடியோ…

இந்த சூழலில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் வீடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.  பாதிக்கப்பட்ட பெண்களோ அல்லது  அக்கம் பக்கத்தில் உள்ளவர்களோ அதுகுறித்து உரிய நேரத்தில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, அவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முன்னணி நடிகர்கள் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

வன்முறைக்கு முற்றுப்புள்ளி என்ற தலைப்பில் நடிகரும் இயக்குநருமான வெங்கட் பிரபு, நடிகைகள்  நதியா, சிம்ரன்,ஸ்ருதி ஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் அந்த வீடியோவில் பேசியுள்ளனர். அந்த வீடியோவை நடிகை நதியா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nadiya Moidu (@simply.nadiya) on

 

 

Share this story