பேட்ட திரைப்படத்தை அடுத்து தீவிர அரசியலில் ஈடுபடுவாரா ரஜினி? உண்மை நிலவரம் என்ன?

பேட்ட திரைப்படத்தை அடுத்து தீவிர அரசியலில் ஈடுபடுவாரா ரஜினி? உண்மை நிலவரம் என்ன?

பேட்ட திரைப்படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: பேட்ட திரைப்படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில்  நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டமாகச் சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் படப்பிடிப்பைக் குழுவினர் நடத்தி வருகின்றனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அங்கேயும் ரசிகர்கள் கூடிவிடுவதால் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதையடுத்து அடுத்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு முடியும் என்று பேசப்படுகிறது.

இந்த நிலையில் பேட்ட படத்தை முடித்துவிட்டு மீண்டும் புதிய படமொன்றில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும், இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க  உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் பேட்ட படத்தையடுத்து ரஜினி தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளார் என்று ரஜினி மக்கள் மன்ற வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதையடுத்து விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story