மகேஷ்பாபுவின் புதிய தியேட்டர்: சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு!

மகேஷ்பாபுவின் புதிய தியேட்டர்: சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு!

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு கட்டியுள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரின் திறப்பு விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அழைத்துள்ளார்.

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு கட்டியுள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரின் திறப்பு விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அழைத்துள்ளார்.

பொதுவாகவே நடிகர்கள் தங்களது சம்பள பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வார்கள். இந்நிலையில் நடிகர் மகேஷ்பாபு ஹைதராபாத்தில் ஹை கிளாஸ் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை, ஆசியன் நிறுவனத்துடன் இணைந்து கட்டியுள்ளார்.

மகேஷ்பாபுவின் புதிய தியேட்டர்: சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு!

‘ஏஎம்பி சினிமாஸ்’ என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரில் பெரிய நடிகரின் படத்தை ரிலீஸ் செய்ய மகேஷ்பாபு திட்டமிட்டுள்ளாராம். ஆகையால் இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் சூப்பர் ஸ்டாரின் பிரம்மாண்ட படமான ‘2.0’ படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறாராம். இதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க மகேஷ்பாபு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் சூப்பர் ஸ்டாரின் பிரம்மாண்ட படமான ‘2.0’ படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறாராம். இதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க மகேஷ்பாபு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹைதராபாத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த மல்டிபிளக்ஸ் தியேட்டரில் 1638 இருக்கைகளுடன் கூடிய 7 திரையரங்குகள் உள்ளன. 3டி டெக்னாலஜி, டால்பி அட்மோஸ் சவுண்ட் சிஸ்டம் என அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள தியேட்டரில் ‘2.0’ படத்தை காண்பது புது அனுபவமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this story