மலையாளம் பிக் பாஸால் டேமேஜ் ஆகும் மோகன்லால் இமேஜ்!

மலையாளம் பிக் பாஸால் டேமேஜ் ஆகும் மோகன்லால் இமேஜ்!

இப்போது மோகன் லால் நடத்தும், மலையாள பிக்பாஸ் சீசன் -2 ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. அதில் பழமை வாதம் பேசுகிறார், தண்ணீர் குடிக்கும் கிளாஸை டாய்லெட்டுக்கு கொண்டு போகிறார் என்று சின்ன சின்ன குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருந்த ரஞ்சித் என்கிற கேரக்டர் எவிக்ட் ஆகுமா இல்லையா என்கிற பரபரப்பில் இருந்தபோது, சம்பந்தப்பட்ட ரஞ்சித் பச்சை மிளகாய் பேஸ்ட்டை நடிகை ரேஷ்மா கண்ணில் இட்ட சம்பவம் நடந்தது.

அதைத் தொடர்ந்து அவரை எப்படி தண்டிப்பது என்கிற விவகாரம் கேரள தேசமெங்கும் நடந்தது. கடைசியில் ரஞ்சித் செய்தது கிரிமினல் குற்றம் என்று சொல்லி அவரை வெளியேற்றினார் மோகன்லால். இது ரஞ்சித்தை ஆதரித்த பிக்பாஸ் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் சமூக வலைத் தளங்களில் சூப்பர்ஸ்டார் என்றும் பாராமல் மோகன்லாலை கண்டபடி கழுவி ஊற்றி வருகிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆலப்பி அஷ்ரப் என்கிற இயக்குநர் ரஞ்சித்தை ஹீரோவாக்கி சினிமாவில் நடிக்க வைக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். அந்தப் படத்துக்கு ‘ கிரேசி டாக்’ என்று பெயரிட்டு இருக்கிறார். டாக்ட்டர் ரஞ்சித் என்று அழைக்கப்படும் ரஞ்சித் நம்ம ஊர் ராமர்பிள்ளை போன்றதோர் விஞ்ஞானியாகத்தன் நேற்றுவரை அறியப்பட்டார், பிக்பாஸ் அளித்த சந்தர்ப்பம் அவரை ஹீரோவாகி, சூப்பர்ஸ்டார் மோகன்லாலை வில்லனாக்கி விட்டது.

Share this story