மிரட்டிய மில்டனை விரட்டிய கோலிவுட் -கன்னட சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் விஜய் மில்டன்

மிரட்டிய மில்டனை விரட்டிய கோலிவுட் -கன்னட சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் விஜய் மில்டன்

கோலிவுட்டில் சிறந்த ஒளிப்பதிவாளராக ப்ரியமுடன் ,காதல் ,வழக்கு எண் 18/19,தீபாவளி போன்ற வெற்றி படங்களில் பணியாற்றி பல விருதுகளை வாங்கி -கோலிசோடா ,கடுகு போன்ற படங்களை இயக்கிய விஜய் மில்டன் இப்போது தனது அடுத்த அடியை நோக்கி முன்னேற உள்ளார் .

கோலிவுட்டில் சிறந்த ஒளிப்பதிவாளராக ப்ரியமுடன் ,காதல் ,வழக்கு எண் 18/19,தீபாவளி போன்ற வெற்றி படங்களில் பணியாற்றி பல விருதுகளை வாங்கி -கோலிசோடா ,கடுகு போன்ற படங்களை  இயக்கிய  விஜய் மில்டன் இப்போது தனது அடுத்த அடியை நோக்கி முன்னேற உள்ளார் .

மிரட்டிய மில்டனை விரட்டிய கோலிவுட் -கன்னட சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் விஜய் மில்டன்

தமிழ் சினிமாவில் ஒரு செண்டிமெண்ட் உண்டு ஒரு கேமெராமன் இயக்குனராக அவதாரம் எடுத்துவிட்டால் அடுத்து அவரை கேமெராமேன் வேலைக்கு எந்த இயக்குனரும் அழைக்க மாட்டார் .இதற்கு தங்கர்பச்சான் ,kv ஆனந்த் விஜய்மில்டன் ,இன்னும் பலரை உதாரணமாக கூறலாம். 
ஒளிப்பதிவாளர்-இயக்குனர் விஜய் மில்டன் தமிழில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பல படங்களை இயக்கியுள்ளார். . இருப்பினும், அவர் இதுவரை எந்த கன்னட படத்தையும் இயக்கவில்லை.

மிரட்டிய மில்டனை விரட்டிய கோலிவுட் -கன்னட சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் விஜய் மில்டன்

அதனால் சிவராஜ்குமாரின் 124 வது கன்னட  படத்தை அவர் இயக்கவுள்ளார். புரொடக்ஷன் ஹவுஸ் மற்றும் படக் குழுவினர் இதைப்பற்றி  வேறு விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. கன்னட நடிகர் விஜய் சிவராஜ்குமாரை ஒரு ஸ்கிரிப்டுடன் சந்தித்ததாகவும், “செஞ்சுரி ஸ்டார்” அதில் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும், அவர் விஜய்க்கு உடனே கால்ஷீட் கொடுத்து  வேலையை ஆரம்பிக்க சொன்னதாக  சாண்டல் வுட்  வட்டாரங்கள் தெரிவித்தன.

மிரட்டிய மில்டனை விரட்டிய கோலிவுட் -கன்னட சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் விஜய் மில்டன்

இப்படத்தில் தனஞ்சய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். கடைசியாக, சிவராஜ்குமாரும் தனஞ்சய்யும்  இணைந்து  “தாகரு” என்ற பரபரப்பான திரைப்படத்தில் நடித்தனர் .

Share this story