விஜய்சேதுபதியின் மாமனிதன் ஷூட்டிங் திரைப்படம் நிறைவடைந்தது!

விஜய்சேதுபதியின் மாமனிதன் ஷூட்டிங் திரைப்படம் நிறைவடைந்தது!

விஜய்சேதுபதி நடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை: விஜய்சேதுபதி நடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான தர்ம துரை படத்தின்  வெற்றியைத் தொடர்ந்து  மீண்டும் இருவரின் கூட்டணியில் உருவான திரைப்படம் மாமனிதன். யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் காயத்ரி, லலிதா, குருசோமசுந்தரம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மேலும்  ‘இமைக்கா நொடிகள்’ படத்தைத் தொடர்ந்து, இதிலும் விஜய் சேதுபதியின் மகளாக நடிக்கிறார் மானஸ்வி. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் தேதி ‘மாமனிதன்’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கின. 

இந்நிலையில் தென்காசி, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற ‘மாமனிதன்’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார் அதில், “விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்க உள்ளது, இளையராஜாவின் இசையைக் கேட்க ஆவலாக உள்ளது” என்று அதில் பதிவிட்டுள்ளார்.

Share this story