விஜய் சேதுபதி படத்தில் நடிகராக அறிமுகமான பிரபல இயக்குநர்!
நடிகர் விஜய் சேதுபதியின் 33வது படத்தில் பிரபல இயக்குநர் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் 33வது படத்தில் பிரபல இயக்குநர் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து ஈர்த்துள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது இவர் சிந்துபாத் படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில், அடுத்ததாக ’மாமனிதன், கடைசி விவசாயி, சங்க தமிழன், லாபம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இதற்கிடையில் அவரின் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல் முறையாக விஜய் சேதுபதி, அமலா பால் இணைந்து நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்குகிறார்.இவர் பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் உதவி இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இந்த படத்தின் கதை சர்வதேச அளவிலான பிரச்னையை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. படத்திற்குத் தற்காலிகமாக VSP 33 என்று பெயர் வைத்துள்ளனர்.
Revealing who’s next in #VSP33.
Welcoming #MagizhThirumeni on board.
Congratulations on your acting debut.
#VSP33WhoIsNext@VijaySethuOffl @Amala_ams @ChandaraaArts @cineinnovations @roghanth @nivaskprasanna @editorsuriya @ruggyz @essakikarthik @onlynikil@ctcmediaboy pic.twitter.com/vdECTLHd9H— Gauthamvasudevmenon (@menongautham) June 18, 2019
இந்த நிலையில் இதில் ‘தடம்’ திரைப்பட இயக்குநர் மகிழ் திருமேனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் மகிழ் திருமேனி நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான அறிவிப்பை இயக்குநர் கவுதம் வாசுதேவ்மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.