விஷால் ஹீரோயினுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ‘காலா’ வில்லன்!

விஷால் ஹீரோயினுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ‘காலா’ வில்லன்!

மும்பை: ‘காலா’ பட வில்லன் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாலிவுட் நடிகை தனுஸ்ரீ பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

தமிழில் விஷால் நடித்த ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’ படத்தின் மூலம் பிரபலமானவர் தனுஸ்ரீ தத்தா. இவர் பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய தனுஸ்ரீ சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் 3 முறை தேசிய விருது பெற்ற நடிகரும், ரஜினி நடித்த ‘காலா’ பட வில்லனுமான நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.

கடந்த 2008ம் ஆண்டில் ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாட தனுஸ்ரீ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த பாடலின் ஷூட்டிங்கின் போது, நானா படேகர் தன்னிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டதாகவும், மானபங்கம் செய்ததாகவும் தனுஸ்ரீ தெரிவித்துள்ளார். மேலும், நானா படேகர் பெண்களை தரக்குறைவாக நடத்துபவர், பல பெண்களை அடித்து துன்புறுத்தியுள்ளார், பலருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். ஆனால் அவரது இந்த லீலைகள் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதில்லை.

இது போன்று பாலியல் பிரச்னைகள் கொடுப்பவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். ரஜினி, அக்ஷய்குமார் போன்ற உச்ச நடிகர்கள் இவருடன் நடிக்கக் கூடாது என்று வேண்டுகோள் வைத்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நானா, தன்னை பற்றி அவதூறு பரப்பும் தனுஸ்ரீ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த விவகாரம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை கிளப்பியதுடன், இது குறித்த காரசார விவாதம் பாலிவுட் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. இவ்விவகாரத்தில் பிரியங்கா சோப்ரா, ஃபரான் அக்தர், பர்கா தத், பரீனித்தி சோப்ரா, ட்விங்கிள் கண்ணா, ரிச்சா சத்தா, ஹன்சல் மேத்தா உள்ளிட்ட பலரும் தனுஸ்ரீக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

விஷால் ஹீரோயினுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ‘காலா’ வில்லன்!

மேலும் அமிதாப் பச்சன், அமீர்கான் போன்ற பாலிவுட்டின் உச்ச நடிகர்கள் இது குறித்து கருத்துக் கூற மறுத்திவிட்டனர். தமிழ்-தெலுங்கு திரையுலகை நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பாக்கிய நிலையில், பாலிவுட்டில் தனுஸ்ரீ கூறியிருக்கும் பாலியல் குற்றச்சாட்டு கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this story