வீட்டில் முடங்கிய பிரபலங்கள்.. அம்மாவுடன் நேரத்தை செலவிடும் சிரஞ்சீவி..
1585154265000
21 நாட்கள் ஊரடங்கு உத்தரவிற்குப் பிறகு அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். பரபரப்பாக ஓடிகொண்டிருந்தவர்கள் இன்று வீட்டில் இருப்பதால் எப்படி நேரத்தை போக்குவது என்று தெரியாமல் திகைத்து வருகின்றனர். ஒவ்வொரும் தங்கள் மனதில் நீண்ட நாள் இருந்த ஆசைகள் அனைத்தையும் தற்போது நிறைவேற்றி வருகின்றனர்.
தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இந்த நேரத்தை தன் குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார். தன் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட செல்பியை இணையத்தில் பகிர்ந்த அவர் “வீட்டில் இருக்கும் நேரம்.. அம்மாவுக்கான நேரம், இந்த நேரத்தில் தான் நாம் நமது பெற்றோர்களையும் வயதில் மூத்தவர்களையும் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். உங்கள் பெற்றோர்கள்/மூத்தவர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பியை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.