வீட்டுச் சுவற்றில் மகன் வரைந்த ஓவியம் !! எனக்கு கிடைத்த பரிசாக கருதுவதாக கரீனா கபூர் பெருமிதம் !!

வீட்டுச் சுவற்றில் மகன் வரைந்த ஓவியம் !! எனக்கு கிடைத்த பரிசாக கருதுவதாக கரீனா கபூர் பெருமிதம் !!

உங்கள் படைப்பாற்றலை தடுக்கும் சுவர் இருந்தால், அங்கேயே ஓவியம் வரைந்து திறமையை நிரூபியுங்கள் என நடிகை கரீனா கபூர் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

[video:https://www.instagram.com/p/B_H_rumpdWk/?utm_source=ig_web_copy_link]

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உலகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் பெரியவர்களும் குழந்தைகளும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதற்கிடையே கொரரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீட்டில் உள்ள மழலையர்கள் தங்களால் முடிந்த வரை ஓவியங்கள் மூலமாகவும், பாடல்கள் மூலமாகவும், வெளிப்படுத்தி வருகின்றனர். இது வைரலாகி வருகிறது. 

[video:https://www.instagram.com/p/B_H3j9CJWf8/?utm_source=ig_web_copy_link]

இதற்கிடையே நடிகை கரீனா கபூரின் கணவர் சைப் அலிகான் ஒரு ஓவியம் வீட்டு சுவற்றில் வரைந்திருந்தார். அது குறித்து கருத்து தெரிவித்திருந்த கரீனா கபூர் தன்னுடைய கணவர் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கிப்ட் தருவதுபோல் அந்த ஓவியம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே கரினா கபூரின் 3 வயது மகன் தைமூர் அலிகான் வீட்டுச் சுவற்றில் ஒரு ஓவியம் வரைந்துள்ளான். இதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த கரீனா கபூர் தன்னுடைய கணவர் போலவே மகனும் ஓவியம் வரைந்துள்ளது தனக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.

[video:https://www.instagram.com/p/B_H7Z8yJJzL/?utm_source=ig_web_copy_link]

3 வயது மகன் தைமூர் அலிகான் மிகவும் அழகாக தங்களது வீட்டில் ஓவியம் வரைந்துள்ளான். மேலும் மகன் சுவற்றில் மிகவும் பொறுப்பா வரைந்து கொண்டிருக்கும் ஓவியத்தை படமெடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து கரீனா கபூர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தன்னுடய மகன் இப்படி மெய்மறந்து வரைந்த ஓவியத்தை ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறுவர்களுடன் விளையாடும் புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார் கரீனா கபூர்

Share this story