ஸ்ரீ தேவியின் முதலாம் ஆண்டு நினைவு நாள்: மகள் ஜான்வி உருக்கமான பதிவு!

ஸ்ரீ தேவியின் முதலாம் ஆண்டு நினைவு நாள்: மகள் ஜான்வி உருக்கமான பதிவு!

ஸ்ரீ தேவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று மகள் ஜான்வி கபூர் தனது சமூகவலைதளபக்கத்தில் உருக்கமான போஸ்ட் போட்டுள்ளார்

சென்னை: ஸ்ரீ தேவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று மகள் ஜான்வி கபூர் தனது சமூகவலைதளபக்கத்தில் உருக்கமான போஸ்ட் பதிவிட்டுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி தமிழ் மட்டுமின்றி பாலிவுட் வரை சென்று 50 ஆண்டுகள் மேல் திரைத்துறையில் சிறந்த நடிகையாகக் கலக்கினார்.  இவர் 1996ம் ஆண்டு பட தயாரிப்பாளர் போனி கபூரை மணந்து ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர்.

ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி துபாய் சென்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவு இந்தியா முழுவதும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. 

 
 
 

 
 
 
 
 

 
 

 
 
 

My heart will always be heavy. But I’ll always be smiling because it has you in it.

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி உயிர் இழந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனால்  ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார், அதில்” ‘என் இதயம் எப்போதும் பாரமாக இருக்கும். அதில் நீங்கள் இருப்பதால் எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பேன்’ என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். ஜான்வியின் இந்த பதிவிற்குப் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

Share this story